வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சோகமடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டிய தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு வருகின்றன.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக விளங்கும் போப் பிரான்சிஸுக்கு 87 வயதாகிறது. அவர் பல ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், சமீபத்தில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் உடல் நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. போப் பிரான்சிஸ், சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சில நிகழ்வுகளை தவிர்த்துவந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியதும், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
போப்பாண்டவரின் உடல்நிலை மேலும் மோசமடையலாம் என்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாடிகன் நிர்வாகம் ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே போப்பாண்டவர் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் இந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளுக்கு அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வார ஞாயிற்றுக்கிழமையும் கூட போப்பாண்டவர் வழிபாடுகளில் பங்கேற்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.
சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்
திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?
செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு
பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி
ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு
{{comments.comment}}