போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை எப்படி இருக்கிறது?.. கவலையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்

Feb 23, 2025,09:13 AM IST

வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சோகமடைந்துள்ளனர்.  அவர் விரைவில் குணமடைய வேண்டிய தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு வருகின்றன.


ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக விளங்கும் போப் பிரான்சிஸுக்கு  87 வயதாகிறது. அவர் பல ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், சமீபத்தில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். 




மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் உடல் நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. போப் பிரான்சிஸ், சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சில நிகழ்வுகளை தவிர்த்துவந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியதும், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.


போப்பாண்டவரின் உடல்நிலை மேலும் மோசமடையலாம் என்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாடிகன் நிர்வாகம் ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.


இதற்கிடையே போப்பாண்டவர் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் இந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளுக்கு அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  கடந்த  வார ஞாயிற்றுக்கிழமையும் கூட போப்பாண்டவர் வழிபாடுகளில் பங்கேற்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்