வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சோகமடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டிய தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு வருகின்றன.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக விளங்கும் போப் பிரான்சிஸுக்கு 87 வயதாகிறது. அவர் பல ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், சமீபத்தில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் உடல் நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. போப் பிரான்சிஸ், சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சில நிகழ்வுகளை தவிர்த்துவந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியதும், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
போப்பாண்டவரின் உடல்நிலை மேலும் மோசமடையலாம் என்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாடிகன் நிர்வாகம் ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே போப்பாண்டவர் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் இந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளுக்கு அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வார ஞாயிற்றுக்கிழமையும் கூட போப்பாண்டவர் வழிபாடுகளில் பங்கேற்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}