போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை எப்படி இருக்கிறது?.. கவலையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்

Feb 23, 2025,09:13 AM IST

வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சோகமடைந்துள்ளனர்.  அவர் விரைவில் குணமடைய வேண்டிய தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு வருகின்றன.


ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக விளங்கும் போப் பிரான்சிஸுக்கு  87 வயதாகிறது. அவர் பல ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், சமீபத்தில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். 




மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் உடல் நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. போப் பிரான்சிஸ், சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக சில நிகழ்வுகளை தவிர்த்துவந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியதும், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.


போப்பாண்டவரின் உடல்நிலை மேலும் மோசமடையலாம் என்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாடிகன் நிர்வாகம் ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.


இதற்கிடையே போப்பாண்டவர் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் இந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளுக்கு அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  கடந்த  வார ஞாயிற்றுக்கிழமையும் கூட போப்பாண்டவர் வழிபாடுகளில் பங்கேற்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்