Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!

Apr 18, 2026,05:04 PM IST

- கவித்தாரகை பொற்செல்வி ராஜன்     

      

கோடைக் காலமே கொளுத்தும் வானமே      

சூடான கதிர்கள் சுற்றி வளைக்குமே


இருந்தும் மணலில் மகிழ்வாய் ஆடுவோமே      

மிதிவண்டி ஏறி சாலையில் சுற்றுவோமே

      

ஆலமரத்தடியில் ஆசையாய் கூட்டாஞ்சோறு சமைப்போமே

ஆலமர விழுதிலே உற்சாகமாய் ஊஞ்சலாடுவோமே


      


காகிதக் கத்தியிலே மிடுக்காய்ச் சண்டையிடுவோமே

மணல்வீடு மாலையில் ஆளுக்கொன்றாய் கட்டுவோமே

      

குடியேற முடியாவிட்டாலும் குறையில்லாமல் குதூகலிப்போமே

வெப்பக் காலத்தில் தெப்பத்தில் குதிப்போமே

      

கிணற்று நீரில் குட்டிக்கரணம் போடுவோமே

இன்னிசை கீதமே இளவேனிற் தென்றலே    

      

(கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டி முதலும் முடிவும்.. அதில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர், கவித்தாரகை பொற்செல்வி ராஜன், கோவையைச் சேர்ந்தவர்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்