+1 மற்றும் +2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வுகள் தொடக்கம்

Feb 12, 2024,12:25 PM IST

சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள +1 மற்றும் +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.


தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான  10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல்  மாதத்திற்குள் நடந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவுள்ளனர்.




 இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (பிப்ரவரி 12ஆம் தேதி)  தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி பாட வாரியாக காலை மற்றும் மாலை வேலைகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது.


இதற்கான ஏற்பாடுகளை அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளன. அரசு தேர்வு துறை வழிகாட்டுதலின் படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஒரு அறைக்கு  25 முதல் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 17ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி, தேர்வுக்கான பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிப்., 19ம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்