சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள +1 மற்றும் +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.
தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நடந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவுள்ளனர்.

இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (பிப்ரவரி 12ஆம் தேதி) தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி பாட வாரியாக காலை மற்றும் மாலை வேலைகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளன. அரசு தேர்வு துறை வழிகாட்டுதலின் படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு அறைக்கு 25 முதல் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 17ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி, தேர்வுக்கான பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிப்., 19ம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
{{comments.comment}}