பெங்களூரு: விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் பத்திரமாக வெளியே வந்துள்ளது. இதன் மூலம் சந்திரயான் 3 திட்டத்திற்கு அடுத்த வெற்றி கிடைத்துள்ளது.
சந்திரயான் 3 திட்டம் முழுமை பெற்றுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து முதலில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. அதன் பின்னர் இன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.
நிலவில் இறங்கிய பின்னர் 10 மணிக்குப் பிறகு லேண்டரிலிருந்து சாய்தளம் திறக்கப்பட்டது. பிறகு அதன் வழியாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. நிதானமாக அடியெடுத்து வைத்து நகர்ந்து நகர்ந்து நிலவைத் தொட்டு நின்றது பிரக்யான் ரோவர்.
பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு படு பிசியாக இருக்கும். நிலவின் தரைத் தளத்தில் அது பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளது. பூமியின் 14 நாட்கள் என்பது நிலவைப் பொறுத்தவரை 1 நாள்தான். ஆக, நிலவில் ஒரு நாள் ஆய்வு நடத்தவுள்ளது பிரக்யான் ரோவர். அதேசமயம், இந்த ரோவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மேலும் ஒரு நிலவு நாள் கூட அது செயல்பட வாய்ப்புண்டு. அதாவது மேலும் 14 பூமி நாட்களுக்கு அது நிலவில் ஆய்வு மேற்கொள்ள முடியும்.
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
{{comments.comment}}