பெங்களூரு: விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் பத்திரமாக வெளியே வந்துள்ளது. இதன் மூலம் சந்திரயான் 3 திட்டத்திற்கு அடுத்த வெற்றி கிடைத்துள்ளது.
சந்திரயான் 3 திட்டம் முழுமை பெற்றுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து முதலில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. அதன் பின்னர் இன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.

நிலவில் இறங்கிய பின்னர் 10 மணிக்குப் பிறகு லேண்டரிலிருந்து சாய்தளம் திறக்கப்பட்டது. பிறகு அதன் வழியாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. நிதானமாக அடியெடுத்து வைத்து நகர்ந்து நகர்ந்து நிலவைத் தொட்டு நின்றது பிரக்யான் ரோவர்.
பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு படு பிசியாக இருக்கும். நிலவின் தரைத் தளத்தில் அது பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளது. பூமியின் 14 நாட்கள் என்பது நிலவைப் பொறுத்தவரை 1 நாள்தான். ஆக, நிலவில் ஒரு நாள் ஆய்வு நடத்தவுள்ளது பிரக்யான் ரோவர். அதேசமயம், இந்த ரோவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மேலும் ஒரு நிலவு நாள் கூட அது செயல்பட வாய்ப்புண்டு. அதாவது மேலும் 14 பூமி நாட்களுக்கு அது நிலவில் ஆய்வு மேற்கொள்ள முடியும்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}