Chandrayaan 3.. விக்ரம் லேண்டரை விட்டு வெளியே வந்தது.. பிரக்யான் ரோவர்!

Aug 23, 2023,11:15 PM IST

பெங்களூரு: விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் பத்திரமாக வெளியே வந்துள்ளது. இதன் மூலம் சந்திரயான் 3 திட்டத்திற்கு அடுத்த வெற்றி கிடைத்துள்ளது.


சந்திரயான் 3 திட்டம் முழுமை பெற்றுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து முதலில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. அதன் பின்னர் இன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.




நிலவில் இறங்கிய  பின்னர் 10 மணிக்குப் பிறகு லேண்டரிலிருந்து சாய்தளம் திறக்கப்பட்டது. பிறகு அதன் வழியாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. நிதானமாக அடியெடுத்து வைத்து நகர்ந்து நகர்ந்து நிலவைத் தொட்டு நின்றது பிரக்யான் ரோவர்.


பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு படு பிசியாக இருக்கும். நிலவின் தரைத் தளத்தில் அது பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளது.  பூமியின் 14 நாட்கள் என்பது நிலவைப் பொறுத்தவரை 1 நாள்தான். ஆக, நிலவில் ஒரு நாள் ஆய்வு நடத்தவுள்ளது பிரக்யான் ரோவர். அதேசமயம், இந்த ரோவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மேலும் ஒரு நிலவு நாள் கூட அது செயல்பட வாய்ப்புண்டு. அதாவது மேலும் 14 பூமி நாட்களுக்கு அது நிலவில் ஆய்வு மேற்கொள்ள முடியும்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்