2026 சட்டமன்றத் தேர்தலில்..விஜய் தனித்து போட்டியிட முடிவு..தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்

Mar 01, 2025,08:44 PM IST

சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளார். தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைப்பார் என தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாத் கிஷோர் தந்தி டிவிக்கு பிரத்யோக பேட்டி அளித்துள்ளார். 



நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என கூறி கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி,  விக்கவாண்டியில் நடைபெற்ற  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விஜய் விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மறுபக்கம் தேர்தல் பணிகளை எதிர்கொண்டு தீவிரமாக களமிறங்கிய நடிகர் விஜய் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து முடித்தார். அதே சமயத்தில் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா, வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கிய சாமியும் தவெகவில் இணைந்தனர்.


இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.




சமீபத்தில் நடைபெற்ற தவெவின் முதலாம் ஆண்டு விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு முக்கியத்துவம் கொடுத்து மேடை ஏற்றினார் விஜய். அப்போது பிரசாந்த் கிஷோர் விஜய் ஒரு தலைவர் அல்ல. தமிழ்நாட்டின் நம்பிக்கை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம்  தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பேசியிருந்தார்.


இந்த நிலையில் ஜான் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தந்தி டிவிக்கு பிரத்யோக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,


தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நினைக்கிறார். என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன்.பீகார் தேர்தலில் எனக்கு உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார். பீகாரில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.


2026 சட்டமன்றத் தேர்தலில்,தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜய் முடிவு செய்துள்ளார். அதிமுக விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தவெக விரும்பவில்லை. கூட்டணியின்றி விஜய் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவார். தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார்  என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்