தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்.. விஜயகாந்த் உடல் நலிவுற்றிருப்பதால்!

Dec 14, 2023,06:58 PM IST

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் பொதுக்குழுவைக் கூட்டி இன்று இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தேமுதிக நிறுவனராக, தலைவராக இருந்து வரும் விஜயகாந்த் வசம் பொதுச் செயலாளர் பதவி இதுவரை இருந்து வந்தது. அவர் உடல் நலிவுற்றிருப்பதால் அவரிடமிருந்த பொதுச் செயலாளர் பதவியை பிரேமலதாவுக்கு கொடுத்துள்ளது தேமுதிக பொதுக்குழு. சென்னை திருவேற்காட்டில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 


கூட்டம் தொடங்கியதும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவெடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தீர்மானம் நிறைவேற்ற பட்ட பின்னர்  விஜயகாந்த் காலில் விழுந்து  ஆசி பெற்ற பின் பிரேமலதா பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். 




பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், பிரேமலதாவுக்கு வீரவாள் கொடுத்தும், அவருக்கு பிரமாண்ட மாலை அணிவித்தும் கட்சி நிர்வாகிகள் கெளரவித்தனர். புதிய பதவியில் அமர்த்தப்பட்டதும்  உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார் பிரேமலதா விஜயகாந்த்.

பிரேமலதா பேசும்போது, எதிர்பாராத வகையில் பொதுச் செயலாளராக  என்னை கேப்டன் அறிவித்துவிட்டார். தீபாவளி போனஸ் போல் எனக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறினர்.  இந்த பதவி எனக்கு கொடுக்கப் போகிறார் என்பது நான் உட்பட யாருக்கும் தெரியாது. என்னை வாழ்த்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. 


கேப்டனிடமிருந்து பாராட்டும் பதவியையும் பெறுவது எளிதல்ல. உண்மை உழைப்பு இருந்தால்தான் தேமுதிகவில் வளர்ச்சி இருக்கும். வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். 


குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்கு வருவதை அந்த கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்க முடியாத நிலையில் ஆளுங்கட்சி உள்ளது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.


வீல் சேரில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்த்


முன்னதாக சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் குணமடைந்த விஜயகாந்த், வீல் சேரில் அமர வைக்கப்பட்டு மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அவரால் இயல்பாகவே உட்கார முடியவில்லை. சாய்ந்து விழுந்தார். அவருக்கு அருகில் இருந்தோர் அவரைத் தாங்கிப் பிடித்தபடியே இருந்தனர்.


விஜயகாந்த்தை வீல்சேரில் நலிவடைந்த நிலையில் பார்த்த கட்சி நிர்வாகிகள் பலர் கலங்கிய கண்களுடன் அவரையே பார்த்தபடி இருந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்