சென்னை: 2016ம் ஆண்டிலேயே கேப்டன் உயிருடன் இருந்தபோதே திமுக கூட்டணி வந்திருக்க வேண்டியது. 10 வருடம் தாமதமாக அது நடந்திருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது. திமுகவும், தேமுதிகவும் இன்று கூட்டணியை உறுதி செய்துள்ளோம்.
கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது. அதற்கேற்ப இதை அமைத்துள்ளோம்.

2016ம் ஆண்டிலேயே நாங்கள் இணைந்திருக்க வேண்டியது. கலைஞர் பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்றால். ஆனால் கேப்டன் இப்போது இல்லாத நிலையில் இந்தக் கூட்டணி தாமதமாக 10 வருடம் கழித்து நடந்துள்ளது. இந்தக் கூட்டணி 200 சதவீதம் வெற்றி பெறும்.
இப்போது கூட்டணிக்கு வந்துள்ளோம். உறுதி செய்துள்ளோம், கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இனிமேல்தான் எத்தனை தொகுதிகள், யார் யார் எந்ததெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்துப் பேசுவோம். அதற்காக குழு அமைத்து அதெல்லாம் நடைபெறும்.
மற்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்து நடைபெறும்போது நான் பதிலளிப்பேன் என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.
தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளிக்கவில்லை.
கேரளா ஸ்டைல் பப்பாளிக்காய் துவரம்!
இடத்தைப் பொறுத்து பெயர்...!
என்னவென்று செல்வதம்மா... மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை!
திமுக கூட்டணியில் தேமுதிக.. பெருமகிழ்ச்சி அளிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்
விஜய்க்கு "விஜயகாந்த்" மூலம் செக் வைத்த திமுக.. கருணாநிதி விட்டதைப் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு
அனுமன் சிலையை வேற்றுகிரவாசி என்று வர்ணித்த டிரம்ப் ஆதரவாளர்.. இந்துக்கள் கடும் எதிர்ப்பு
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
{{comments.comment}}