கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

Jan 21, 2026,05:06 PM IST

சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.




24ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை பிரசாரம் செய்ய இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து தெரிவிப்போம். தவறான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. தற்போது நான் கட்சி அலுவலகத்தில்தான் இருக்கிறேன். இந்த நிமிடம் வரை அதிமுக–பாஜக கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.


அரசியல் என்பது மக்களுக்கானது தான். மதுரையில் எல்ஐசி அதிகாரியாக பணியாற்றிய கல்யாணியை  அவருடன் வேலை பார்த்த ராமகிருஷ்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவறை சுட்டிக்காட்டியதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்தது மனிதாபிமானத்திற்கு முற்றிலும் எதிரான செயல். இதனை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்