New Governors: மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம்.. புதுச்சேரிக்கு கைலாஷ்நாதன்

Jul 28, 2024,01:29 PM IST

டெல்லி: ஜாரக்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் வகித்து வந்த சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். புதுச்சேரிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதன் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


9 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். அதேபோல 3 மாநில ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விவரம்:




மகாராஷ்டிரா - சி. பி.ராதாகிருஷ்ணன்

தெலங்கானா - ஜிஷ்ணு தேவ் வர்மா

ஜார்க்கண்ட் - சந்தோஷ் கங்வார்

சட்டிஸ்கர் - ராமென் தேக்கா

ராஜஸ்தான் - ஹரிபா கிசன் ராவ் பாக்டே

சிக்கிம் - ஓ.பி. மாத்தூர்

மேகாலயா - விஜய் சங்கர்

அஸ்ஸாம் - லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா

பஞ்சாப் - குலாப் சந்த் கட்டாரியா (சண்டிகர் துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு)

புதுச்சேரி - கைலாஷ்நாதன்


இவர்களில் சந்தோஷ் கங்வார் தீவிர பாஜக தலைவர். லோக்சபா தேர்தலில் பரேலி தொகுதியில் இவர் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால் சீட் கிடைக்கவில்லை. அந்தத் தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்றவர் இவர். அதிருப்தியில் இருந்து வந்த அவரை தற்போது ஆளுநராக்கியுள்ளது பாஜக மேலிடம். கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி, பீகாரில், குர்மி என்ற ஓபிசி சமுதாயத்தின் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை. அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் கங்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாக்டே, முன்னாள் மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ஆவார்.  மகாராஷ்டிராவிலும் பாஜக கடந்த லோக்சபா தேர்தலில் சரிவைச் சந்தித்தது நினைவிருக்கலாம். 


இவர்களில் விஜய்சங்கரின் கதை வித்தியாசமானது. இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். முன்னாள் லோக்சபா எம்.பி. பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து கடந்த 2019ம் மீண்டும் பாஜகவுக்கே வந்தவர். மேகலாயா ஆளுநராகியுள்ளார் விஜய்சங்கர்.


குஜராத்திலிருந்து வரும் கைலாஷ்நாதன்


புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாஷ்நாதன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அதை விட முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2013 முதல் 2014 வரை அவரது தலைமை முதன்மைச் செயலாளராக இருந்தவர் கைலாஷ் நாதன்.


பஞ்சாப் ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்திருந்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு அவரை விடுவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்