மாணவர்களால் சரமாரியாக சூறையாடப்பட்ட... வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

Aug 06, 2024,06:27 PM IST

டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு ஜனாதிபதி முகம்மது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். ராணுவம், அரசியல் கட்சிகள், மாணவர் இயக்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் ஜனாதிபதி.


முன்னதாக இன்று மாலை 3 மணியுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போராட்டத்திலும், கலவரத்திலும் ஈடுபட்டுள்ள மாணவர் இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்தே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார்கள்.




மாணவர்கள் போராட்டம் வன்முறையாகவும், கலவரமாகவும் மாறிய நிலையில் தற்போது மோசமானதொரு சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் நேற்று புகுந்த மாணவர்கள் அதை சூறையாடி விட்டனர். நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து அதை சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல ஷேக் ஹசீனா வீட்டுக்குள்ளும் புகுந்து வீட்டையே சூறையாடி விட்டனர். ஷேக் ஹசீனா குடும்பத்தினரின் பொருட்களையெல்லாம் தூக்கிச் சென்று விட்டனர். அவர்கள் பயன்படுத்தி உள்ளாடைகளைக் கூட விடாமல் எடுத்துச் சென்று அநாகரீகமாக அதை காட்டி நடனமாடியது உலக மக்களிடையே பெரும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்றவரான முகம்மது யூனிஸ் தலைமை தாங்க வேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மாணவர்கள் வசம் இப்போது நாடு போய் விட்டதால் இதை ஜனாதிபதி கேட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மேலும் ராணுவத்தின் ஆட்சியையும் மாணவர்கள் விரும்பவில்லை.


இதுகுறித்து நஹீத் இஸ்லாம் என்ற மாணவர் தலைவர் கூறுகையில் ராணுவத்தின் ஆதரவுடனோ அல்லது ராணுவத்தின் தலைமையிலோ அரசு அமைந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். முகம்மது யூனிஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அவருடன் நாங்கள் பேசி விட்டோம். அவரும் சம்மதித்து விட்டார் என்று கூறினார்.


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு வரும் வரை வங்கதேசம் கொதி நிலையிலேயே இருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்