டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு ஜனாதிபதி முகம்மது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். ராணுவம், அரசியல் கட்சிகள், மாணவர் இயக்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் ஜனாதிபதி.
முன்னதாக இன்று மாலை 3 மணியுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போராட்டத்திலும், கலவரத்திலும் ஈடுபட்டுள்ள மாணவர் இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்தே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார்கள்.

மாணவர்கள் போராட்டம் வன்முறையாகவும், கலவரமாகவும் மாறிய நிலையில் தற்போது மோசமானதொரு சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் நேற்று புகுந்த மாணவர்கள் அதை சூறையாடி விட்டனர். நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து அதை சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல ஷேக் ஹசீனா வீட்டுக்குள்ளும் புகுந்து வீட்டையே சூறையாடி விட்டனர். ஷேக் ஹசீனா குடும்பத்தினரின் பொருட்களையெல்லாம் தூக்கிச் சென்று விட்டனர். அவர்கள் பயன்படுத்தி உள்ளாடைகளைக் கூட விடாமல் எடுத்துச் சென்று அநாகரீகமாக அதை காட்டி நடனமாடியது உலக மக்களிடையே பெரும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்றவரான முகம்மது யூனிஸ் தலைமை தாங்க வேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மாணவர்கள் வசம் இப்போது நாடு போய் விட்டதால் இதை ஜனாதிபதி கேட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மேலும் ராணுவத்தின் ஆட்சியையும் மாணவர்கள் விரும்பவில்லை.
இதுகுறித்து நஹீத் இஸ்லாம் என்ற மாணவர் தலைவர் கூறுகையில் ராணுவத்தின் ஆதரவுடனோ அல்லது ராணுவத்தின் தலைமையிலோ அரசு அமைந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். முகம்மது யூனிஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அவருடன் நாங்கள் பேசி விட்டோம். அவரும் சம்மதித்து விட்டார் என்று கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு வரும் வரை வங்கதேசம் கொதி நிலையிலேயே இருக்கும் என்று தெரிகிறது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}