தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

Apr 05, 2025,05:02 PM IST

கொழும்பு:  இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி இலங்கையில் தெரிவித்துள்ளார்.


மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.   அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். அணி வகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.  பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது  வழங்கி இலங்கை அதிபர் அநுரகுமர திசநாயக கவுரவித்துள்ளார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில்  பங்கேற்கிறார்.




அதன்பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா-இலங்கை இடையேயான உறவு நன்றாக உள்ளது. தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினையில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை  நின்றது.  இலங்கை அதிபராக திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள 3 கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து,  இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேசுகையில், இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இந்தியா-இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செலும் இந்த மண்ணில் நடக்காது என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.




இதனிடையே, இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தளத்தில்  வெளியிட்ட பதிவில், இலங்கையில் தரையிரங்கி விட்டேன். விமானநிலைத்திற்கு வந்து என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி. இலங்கையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்