மாஸ்கோவை அதிர வைத்த தீவிரவாத தாக்குதல் .. ஐ எஸ் ஐ எஸ் பொறுப்பேற்பு.. பிரதமர் மோடி கண்டனம்

Mar 23, 2024,09:42 AM IST

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த செயலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது


ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று இரவு ஒரு இசை நிகழ்ச்சி நடந்து வந்த அரங்கில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ  சீருடையில் இருந்த இவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியை காண வந்தவர்கள் சிதறி ஓடினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கியும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் பலர் பலியானார்கள். அந்த இடம் முழுவதும் உடல்களாக கிடந்தது புகை மூட்டமாக கிடந்தது.




துப்பாக்கி சூடு மட்டுமல்லாமல் கை எறி குண்டுகளையும் அவர்கள் பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத செயல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் உடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவில் அதன் தலைநகரிலேயே நடந்துள்ள இந்த பயங்கரவாத செயல் ரஷ்யாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


முன்னதாக இசை நிகழ்ச்சி நடந்து வந்த அரங்கிற்குள் ராணுவ சீருடையில் பலர் உள்ளே புகுந்துள்ளனர். உள்ளே புகுந்த அவர்கள் கண்மூடித்தனமாக தானியங்கி துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அந்த அரங்கில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் வேகமாக வெளியேற முற்பட்டதில் கூட்டம் நெரிசலும் ஏற்பட்டது. இதிலும் சிலர் பலியாகி உள்ளனர்.


பிரதமர் மோடி கண்டனம்


ரஷ்யாவில் நடந்துள்ள இந்த பயங்கரவாத செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் ரஷ்யாவுக்கு துணை நிற்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறுகையில் சம்பவம் நடந்த இடம் தொடர்பான காட்சிகள் மிகவும் அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.  பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த தீவிரவாத செயல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இது ரஷ்யாவுக்கு மிகவும் கடினமான தினம் என்று அவர் கூறியுள்ளார்.


முன்னதாக கடந்த மாதமே ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடக்கலாம் என்று ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தது. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 48 மணி நேரங்களில் பெரும் அளவிலான கூட்டங்கள் நடைபெறும் இடங்களை விட்டு அமெரிக்கர்கள் தள்ளி இருக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே இப்படி ஒரு தீவிரவாத சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஷ்ய பாதுகாப்பு ரஷ்ய உணவு அமைப்பு ஒரு தீவிரவாத தாக்குதலை தடுத்ததாக செய்தி வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம். அப்பொழுது தடுக்கப்பட்ட தீவிரவாத தாக்குதல் தற்போது நடந்திருப்பது ரஷ்யாவின் உளவுத்துறையின் தோல்வியாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்