வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வந்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி வாரணாசியிலிருந்து வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு மீண்டும் போட்டியிட்டுள்ளார். வாக்குகள் எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் மோடி 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல் சுற்று நிலவரப்படி, வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் பிரதமர் மோடியும், 3வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதீர் ஜமால் லாரியும் உள்ளனர். இந்த்த தொகுதியில் நோட்டாவுக்கு 158 வாக்குகள் முதல் சுற்றில் கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி பின்னடைவு என்பது மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் பாதிக்குப் பாதி தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. வாரணாசி உ.பியில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}