வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வந்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி வாரணாசியிலிருந்து வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு மீண்டும் போட்டியிட்டுள்ளார். வாக்குகள் எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் மோடி 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல் சுற்று நிலவரப்படி, வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் பிரதமர் மோடியும், 3வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதீர் ஜமால் லாரியும் உள்ளனர். இந்த்த தொகுதியில் நோட்டாவுக்கு 158 வாக்குகள் முதல் சுற்றில் கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி பின்னடைவு என்பது மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் பாதிக்குப் பாதி தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. வாரணாசி உ.பியில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}