வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வந்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி வாரணாசியிலிருந்து வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு மீண்டும் போட்டியிட்டுள்ளார். வாக்குகள் எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் மோடி 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல் சுற்று நிலவரப்படி, வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் பிரதமர் மோடியும், 3வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதீர் ஜமால் லாரியும் உள்ளனர். இந்த்த தொகுதியில் நோட்டாவுக்கு 158 வாக்குகள் முதல் சுற்றில் கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி பின்னடைவு என்பது மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் பாதிக்குப் பாதி தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. வாரணாசி உ.பியில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}