Cyclne Fengal.. இன்று மாலை 5.30க்கு பெங்கல் புயல் உருவாகிறது.. தனியார் வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

Nov 27, 2024,01:20 PM IST

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புயல் இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயலாக உருவாகிறது. பரங்கிப்பேட்டை- சென்னை இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு  உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழ்நாடு இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மெதுவாக நகர்வதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 




இந்த நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக நகர்வதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


,தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தமிழ்நாட்டின் கரையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கி கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்  என  எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். 


இதன் காரணமாக விழுப்புரம், சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இந்நிலையில்,  வங்கக் கடலில் உருவாகும் புயல் இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயலாக உருவாகிறது. பரங்கிப்பேட்டை- சென்னை இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு  உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்