வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

Oct 23, 2024,02:21 PM IST

வயநாடு:  கேரள மாநிலம் வயநாடு மக்களைவைத் தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தேர்தலில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதி மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் அவர் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் விதிகளின்படி ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும் என்பதால், ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். 




இதனால் இத்தொகுதி காலியாக இருந்து வந்தது. இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பை வெளியிட்டது.  பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் சத்தியன் மோக்கேரி ஆகியோர் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளனர். இதனால் இங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 


வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பிரியங்கா காந்தி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உடன் இருந்தனர். தொண்டர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்