Motivation: மனிதம் எனப்படுவது யாதெனில்... பிடிஆர் செய்த இந்த செயல்தான்!

May 18, 2023,02:33 PM IST

சென்னை: ஒரு ஏழை டெய்லருக்கு மிகப் பெரிய உதவியை அளித்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்  தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மனிதாபிமானம், மனிதம் எல்லாம் மரித்துப் போய்க் கொண்டிருக்கும் காலம் இது. சாலையோரத்தில் யாராவது மயங்கிக் கிடந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ ஓடோடிச் சென்று உதவி செய்வோர் இன்று அருகிப் போய் விட்டனர். அவரவர் வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருப்பவர்களே அதிகம்.

அதேபோல மனிதாபிமானத்துடன் அடுத்தவருக்கு உதவுவதும் கூட இன்று இல்லாமல் போய் விட்டது. சுயநலம் மலிந்து போய் விட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு மிகப் பெரிய காரியத்தை செய்துள்ளார்.



கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத் தரும் பணியினை செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலில் தகவல் வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார் நாகேஷ்.

அதில் தான் மிகவும் சிரமப்படுவதாகவும், தனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்றும் கோரியிருந்தார் நாகேஷ். இதையடுத்து அவரது கோரிக்கையைப் பரிசீலித்து உடனடியாக நாகேஷுக்கு வீட்டு மனை வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தன்னால் ஆன ஒரு உதவியைச் செய்துள்ளார்.

நாகேஷை தனது வீட்டுக்கு வரவழைத்த பிடிஆர் அவரிடம் பரிவுடன் பேசி அவரது குடும்ப நிலை குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் ஒரு நிதியுதவியினை வழங்கினார். தற்போது டெய்லர் நாகேஷுக்கு பலரும் உதவ முன்வந்துள்ளதால் அவரது நிலை விரைவில் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்