அச்சச்சோ.. பஞ்சு மிட்டாயால் பேராபத்து.. அதிரடியாகத் தடை செய்தது புதுச்சேரி அரசு!

Feb 09, 2024,05:57 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.


பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..  இந்தப் பாட்டை யாராவது மறக்க முடியுமா.. சூப்பர் ஹிட் பாட்டு.. பாட்டு மட்டுமா.. பஞ்சு மிட்டாயும்தான்.. சின்னப் புள்ளையா இருந்தப்ப மட்டுமல்லாமல் இப்போதும் கூட பீச்சுக்கோ, பொருட்காட்சிக்கோ, வெளியில் எங்காவது போனால், பஞ்சு மிட்டாயைப் பார்த்து விட்டால் போதும்  வாயெல்லாம் நமநமக்கும்! அப்படி ஒரு கிரேஸ் பஞ்சு மிட்டாய்க்கு உண்டு. அந்த கிக்கே தனிதான்.


ஆனால் புதுச்சேரியில் இந்த பஞ்சு மிட்டாய்க்கு அதிரடியாக தடை விதித்து விட்டனர். காரணம் மேட்டர் அந்த அளவுக்கு அபாயகரமானதாக இருக்கிறது.!




புதுச்சேரியில் கடற்கரைச் சாலை, சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில்  பஞ்சுமிட்டாய் விற்பனை எப்பொழுதும் விறுவிறுப்பாக நடைபெறும். குழந்தைகளை கவரும் விதத்தில், பல வண்ணங்களில் காட்சி அளிக்கிறது இந்த பஞ்சு மிட்டாய். குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இது காட்சி அளிப்பதால், பஞ்சு மிட்டாயை பார்த்தாலே குழந்தைகள் அழுது அடம் பிடித்து வாங்குவார்கள். அந்த அளவிற்கு குழந்தைகளை வசீகரிக்கும் தன்மை இந்த பஞ்சு மிட்டாயில் இருக்கிறது. பெற்றோரும் இதனை ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளுக்கு வாங்கிக் கொண்டும் வருகின்றனர்.


இந்த நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரியான ரவிச்சந்தர் பஞ்சுமிட்டாயை வாங்கி சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது தான் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, மனிதர்களுக்கு கேன்சரை உருவாக்கும் ரசாயனம் இந்த பஞ்சு மிட்டாயில் கலந்து இருப்பது தெரிய வந்ததுள்ளது. குறிப்பாக, ரோடமின் பி என்ற  வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனம் எதற்காக பயன்படுத்தப்படுவது தெரியுமா? ஊதுபத்தி மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கும் போது வண்ணத்திற்காக பூசப்படும் நிறமியாகும் இது. குறைந்த விலையில் இந்த ரசாயனம் கிடைப்பதால் இதனை வாங்கி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்தவர்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.


புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயனம் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதன் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கக் கூடாது. புதுச்சேரி அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஞ்சு மிட்டாய் உற்பத்தி செய்பவர்களை கண்டுபிடித்து உற்பத்தி இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வேதி பொருட்கள் கலந்து இருப்பதாக வெளியான தகவலை அடுத்து தற்போது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சந்தோஷமா வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தோம்.. அந்த "பஞ்சுல" கண்டதையும் கலந்து நெருப்பை வச்சுட்டீங்களேய்யா!

சமீபத்திய செய்திகள்

news

May 1: உலக உழைப்பாளர் தினம்.. முயற்சியே வெல்லும்!

news

Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

news

May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

news

Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்