புதுச்சேரி: ஜனவரி 20ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனம் நவோதயா வித்யாலயாக்கள். இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் நடத்தப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது நவோதயா வித்யாலயா ஸ்மிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயாக்கள் இலவச கல்வியை வழங்குகின்றன.

இதில் சேர்வதற்காக திறமையான பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு வருகின்ற 20ம் தேதி நடைபெறுகிறது.
இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து யூனியன் பிரதேச பள்ளி கல்வி இயக்குநரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் வரும் 20 ந்தேதி நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்ரவரி 3 ந்தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
{{comments.comment}}