டில்லி : புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 09ம் தேதியான இன்று காலை 7 மணிக்கு துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தலுக்கான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் இன்று கேரளா, புதுசு்சேரி, அசாம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 09ம் தேதியான இன்று ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகள், அசாமில் உள்ள 126 தொகுதிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது. மக்கள் காலையிலேயே ஆர்வமுடன் வந்து தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். இன்று பதிவாகும் ஓட்டுக்கள் மே 04ம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும். இதில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க போகிறார்கள் என்பது தெரிவிந்து விடும். தற்போது புதுச்சேரியில் பாஜக கூட்டணி வகிக்கும் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சியும், கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான ஆட்சியும் நடந்து வருகிறது.
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
{{comments.comment}}