டில்லி : புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 09ம் தேதியான இன்று காலை 7 மணிக்கு துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தலுக்கான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் இன்று கேரளா, புதுசு்சேரி, அசாம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 09ம் தேதியான இன்று ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகள், அசாமில் உள்ள 126 தொகுதிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது. மக்கள் காலையிலேயே ஆர்வமுடன் வந்து தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். இன்று பதிவாகும் ஓட்டுக்கள் மே 04ம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும். இதில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க போகிறார்கள் என்பது தெரிவிந்து விடும். தற்போது புதுச்சேரியில் பாஜக கூட்டணி வகிக்கும் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சியும், கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான ஆட்சியும் நடந்து வருகிறது.
தாவீதின் குலத்திலிருந்தே மீட்பர் தோன்றுவார்.. அவதரித்தார் இயேசுநாதர்!
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
{{comments.comment}}