ஒரு ஸ்வீட் ஸ்டாலுக்கு வந்த சோதனை.. மீண்டும் மீண்டும் நொறுக்கிய மர்ம நபர்!

Aug 20, 2023,06:06 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு ஸ்வீட்ஸ்டாலை மர்ம நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விநாயக முருகன் என்ற டீ ஸ்டால் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாமுல் கேட்டு ஒரு கும்பல் கடையை சூறையாடி தாக்கியது. இதுதொடர்பாக கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பினர், வர்த்தக சபையினர், பல்வேறு வியாபாரிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், ஐஜி ஆகியோரைச் சந்தித்து பாதுகாப்பு கோரியும், இதுபோல மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனு அளித்தனர்.


இப்படி ஒரு பக்கம் கடைக்காரர் தரப்பில் சீரியஸாக நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில் அந்த முருகன் டீ ஸ்டால் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.  நேற்று இரவு மீண்டும் அக்கடையை மர்ம நபர் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


என்னடா இது முருகன் டீ ஸ்டாலுக்கு வந்த சோதனை என்று குழப்பமடைந்துள்ள ரெட்டியார் பாளையம் இந்த சம்பவத்தையும் வழக்காக பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)

news

World Bicyle day: சிக்கு..‌‌ சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!

news

தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!

news

விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

அதிகம் பார்க்கும் செய்திகள்