புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு ஸ்வீட்ஸ்டாலை மர்ம நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விநாயக முருகன் என்ற டீ ஸ்டால் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாமுல் கேட்டு ஒரு கும்பல் கடையை சூறையாடி தாக்கியது. இதுதொடர்பாக கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பினர், வர்த்தக சபையினர், பல்வேறு வியாபாரிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், ஐஜி ஆகியோரைச் சந்தித்து பாதுகாப்பு கோரியும், இதுபோல மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனு அளித்தனர்.
இப்படி ஒரு பக்கம் கடைக்காரர் தரப்பில் சீரியஸாக நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில் அந்த முருகன் டீ ஸ்டால் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு மீண்டும் அக்கடையை மர்ம நபர் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
என்னடா இது முருகன் டீ ஸ்டாலுக்கு வந்த சோதனை என்று குழப்பமடைந்துள்ள ரெட்டியார் பாளையம் இந்த சம்பவத்தையும் வழக்காக பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}