புது டெல்லி: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த சிஆர்பிஎப் (CRPF) வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்றுஅஞ்சலி செலுத்தினார். அவர்களின் தளராத தைரியத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனும் வலிமையைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்குத் தனது அஞ்சலியை செலுத்தினார்.
பிப்ரவரி 14, 2019 அன்று, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதியதில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்குப் பதிலடியாக சில நாட்களுக்குப் பிறகு இந்தியா 'பாலகோட் வான்வழித் தாக்குதலை' நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் பலவும் அழிக்கப்பட்டன.

புல்வாமா தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளப் பதிவில், "2019-ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரம் செறிந்த நாயகர்களை நினைவு கூர்கிறேன். தேசத்திற்கான அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் சேவை ஆகியவை நமது கூட்டு நனவில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களின் தளராத தைரியத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனும் வலிமை பெறுகிறான்" என்று பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சிஆர்பிஎப் வீரர்களின் இந்த உச்சகட்ட தியாகம் நாட்டின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது," எனத் தெரிவித்தார்.
புனித சனிக்கிழமையின் அமைதி மற்றும் எதிர்பார்ப்பு!
விழுப்புரம் ஸ்டைல்.. பசலை கீரை பொரியல்.. செம டேஸ்ட்டிங்க.. சாப்பிட்டுப் பாருங்க!
கல்வி சுற்றுலாவிற்கு தனது குழந்தைகளை அனுப்பலாமா? வேண்டாமா?
புதுச்சேரியில் ரோடுஷோ...ரசிகர்களின் அல்ட்ராசிட்டியால் பதறி போன விஜய்
தமிழக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்கள்...தேர்தலுக்கு 18 நாட்கள்
தெளிந்த நல்லறிவு...!
தமிழகத்தில் ஏப்ரல் 7 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னைக்கு மட்டும் கிடையாதாம்
தேர்தலில் போட்டியிடாதது ஏன்?.. இதுதாங்கண்ணா காரணம்.. வேற ஒன்னும் இல்லை.. அண்ணாமலை விளக்கம்
ஏப்ரல் 6்ல்.. புதுச்சேரியில்.. காங். தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
{{comments.comment}}