புது டெல்லி: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த சிஆர்பிஎப் (CRPF) வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்றுஅஞ்சலி செலுத்தினார். அவர்களின் தளராத தைரியத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனும் வலிமையைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்குத் தனது அஞ்சலியை செலுத்தினார்.
பிப்ரவரி 14, 2019 அன்று, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதியதில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்குப் பதிலடியாக சில நாட்களுக்குப் பிறகு இந்தியா 'பாலகோட் வான்வழித் தாக்குதலை' நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் பலவும் அழிக்கப்பட்டன.

புல்வாமா தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளப் பதிவில், "2019-ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரம் செறிந்த நாயகர்களை நினைவு கூர்கிறேன். தேசத்திற்கான அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் சேவை ஆகியவை நமது கூட்டு நனவில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களின் தளராத தைரியத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனும் வலிமை பெறுகிறான்" என்று பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சிஆர்பிஎப் வீரர்களின் இந்த உச்சகட்ட தியாகம் நாட்டின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது," எனத் தெரிவித்தார்.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}