புல்வாமா தாக்குதல் தினம் :குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Feb 14, 2026,11:00 AM IST

புது டெல்லி: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த சிஆர்பிஎப் (CRPF) வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்றுஅஞ்சலி செலுத்தினார். அவர்களின் தளராத தைரியத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனும் வலிமையைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்குத் தனது அஞ்சலியை செலுத்தினார்.


பிப்ரவரி 14, 2019 அன்று, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதியதில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்குப் பதிலடியாக சில நாட்களுக்குப் பிறகு இந்தியா 'பாலகோட் வான்வழித் தாக்குதலை' நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் பலவும் அழிக்கப்பட்டன.




புல்வாமா தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளப் பதிவில், "2019-ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரம் செறிந்த நாயகர்களை நினைவு கூர்கிறேன். தேசத்திற்கான அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் சேவை ஆகியவை நமது கூட்டு நனவில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களின் தளராத தைரியத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனும் வலிமை பெறுகிறான்" என்று பதிவிட்டுள்ளார்.


குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சிஆர்பிஎப் வீரர்களின் இந்த உச்சகட்ட தியாகம் நாட்டின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது," எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 6்ல்.. புதுச்சேரியில்.. காங். தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

news

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

news

புதுச்சேரியில் இன்று விஜய் பிரச்சாரம்...3 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்

news

சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!

news

Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!

news

Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!

news

Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!

news

பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!

news

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்

அதிகம் பார்க்கும் செய்திகள்