கீவ்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், உக்ரைன் மீது போர் தொடுத்ததை அவருக்கு மிக மிக நெருக்கமானவர்களே விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி.
'Year' என்று பெயரிடப்பட்ட ஒரு டாக்குமென்டரியில் பேசும்போது இப்படிக் கூறினார் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடமாகி விட்டது. ஆனாலும் போர் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.
நடனமாடும்போதே மாரடைப்பு.. அடுத்தடுத்து 4 சம்பவங்கள்.. அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்!
இந்த நிலையில் இதையொட்டி 'Year' என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தான் ஜெலன்ஸ்கி இப்படிக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தை அந்த நாட்டில் பலரும் விரும்பவில்லை. ஏன் புடினுக்கு மிக மிக நெருக்கமானவர்களே கூட விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் இதழும் இதேபோல ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. புடினின் செயல்பாடுகளால் அவருக்கு நெருக்கமானவர்களே கூட அதிருப்தி அடைந்து வருவதாகவும், இந்த அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறியிருந்தது. ரஷ்யப் படையினர் பெரும் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் கதறுகிறார்கள். போரை முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அந்த செய்தி கூறியிருந்தது.
இதற்கிடையே, உக்ரைன் கூட்டுப்படை தளபதி மேஜர் ஜெனரல் எடுவார்ட் மைகேலோவிச் மாஸ்கலோவை பதவி நீக்கம் செய்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. புதிய தளபதியாக ஒலெக்சாண்டர் பாவுலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
{{comments.comment}}