விரைவில் கொல்லப்படுவார் விலாடிமிர் புடின்.. உக்ரைன் அதிபர் அதிர்ச்சித் தகவல்!

Feb 28, 2023,01:59 PM IST

கீவ்: ரஷ்ய அதிபர்  விலாடிமிர் புடின், உக்ரைன் மீது போர் தொடுத்ததை அவருக்கு மிக மிக நெருக்கமானவர்களே விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி.


'Year' என்று பெயரிடப்பட்ட ஒரு டாக்குமென்டரியில் பேசும்போது இப்படிக் கூறினார் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடமாகி விட்டது. ஆனாலும் போர் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது. 


நடனமாடும்போதே மாரடைப்பு.. அடுத்தடுத்து 4 சம்பவங்கள்.. அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்!


இந்த நிலையில் இதையொட்டி 'Year'  என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தான் ஜெலன்ஸ்கி இப்படிக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தை அந்த நாட்டில் பலரும் விரும்பவில்லை. ஏன் புடினுக்கு மிக மிக நெருக்கமானவர்களே கூட விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.


சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் இதழும் இதேபோல ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. புடினின் செயல்பாடுகளால் அவருக்கு நெருக்கமானவர்களே கூட அதிருப்தி அடைந்து வருவதாகவும், இந்த அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறியிருந்தது. ரஷ்யப் படையினர் பெரும் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் கதறுகிறார்கள். போரை முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அந்த செய்தி கூறியிருந்தது.


இதற்கிடையே, உக்ரைன் கூட்டுப்படை தளபதி மேஜர் ஜெனரல் எடுவார்ட் மைகேலோவிச் மாஸ்கலோவை பதவி நீக்கம் செய்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதற்கான காரணம்  தெரிவிக்கப்படவில்லை. புதிய தளபதியாக ஒலெக்சாண்டர் பாவுலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்