கீவ்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், உக்ரைன் மீது போர் தொடுத்ததை அவருக்கு மிக மிக நெருக்கமானவர்களே விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி.
'Year' என்று பெயரிடப்பட்ட ஒரு டாக்குமென்டரியில் பேசும்போது இப்படிக் கூறினார் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடமாகி விட்டது. ஆனாலும் போர் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.
நடனமாடும்போதே மாரடைப்பு.. அடுத்தடுத்து 4 சம்பவங்கள்.. அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்!
இந்த நிலையில் இதையொட்டி 'Year' என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தான் ஜெலன்ஸ்கி இப்படிக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தை அந்த நாட்டில் பலரும் விரும்பவில்லை. ஏன் புடினுக்கு மிக மிக நெருக்கமானவர்களே கூட விரும்பவில்லை. விரைவில் அவர்களால் புடின் கொல்லப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் இதழும் இதேபோல ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. புடினின் செயல்பாடுகளால் அவருக்கு நெருக்கமானவர்களே கூட அதிருப்தி அடைந்து வருவதாகவும், இந்த அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறியிருந்தது. ரஷ்யப் படையினர் பெரும் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் கதறுகிறார்கள். போரை முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அந்த செய்தி கூறியிருந்தது.
இதற்கிடையே, உக்ரைன் கூட்டுப்படை தளபதி மேஜர் ஜெனரல் எடுவார்ட் மைகேலோவிச் மாஸ்கலோவை பதவி நீக்கம் செய்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. புதிய தளபதியாக ஒலெக்சாண்டர் பாவுலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}