சென்னை: விருதுநகர் தொகுதியில் இன்று பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், தேமுதிக கட்சி சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டனர். தென் சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்த தமிழிசை செளந்தரராஜனும், தமிழச்சி தங்கப்பாண்டியனும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கிறது. 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 28ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். சரத்குமார் சமீபத்தில் தான் பாஜக வுடன் தனது கட்சியை முழுமையாக இணைந்தார். அதன்பின்னர் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு பொதுமக்களை சந்தித்தார். அதன் பின்னர் மனு தாக்கல் செய்ய வந்தார்.
ராதிகா வந்தபோதுதான் விஜய பிரபாகரன் மனுத்தாக்கலை முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். விருதுநகரில் முரசு சின்னத்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். முன்னதாக தனது தாயாரும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்துடன் பராசக்தி மாரியம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் விஜயபிரபாகரனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலின்போது வெளியே வந்த விஜய பிரபாகரன், ராதிகாவைப் பார்த்து வணக்கம் வைத்தார். அவரை ராதிகா வாழ்த்தினார். சரத்குமாரும் தட்டிக் கொடுத்தார். எனது மகளுடன் சேர்ந்து படித்தவர்தான் விஜய பிரபாகரன், அவரும் எனக்கு மகன் போலத்தான் என்று ஏற்கனவே ராதிகா கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
ராதிகாவும், விஜயபிரபாகரனும் இருவரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதினால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கடும் போட்டி நிலவி வருகின்றது. இருவரும் நட்சத்திர போட்டியாளர்கள் என்பாதால் விருதுநகர் தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவுமான மாணிக்கம் தாகூரே மீண்டும் போட்டியிட உள்ளார். இவ்வாறாக முக்கிய பிரபலங்கள் மோதும் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.
தென் சென்னையில் சகோதரிகள் பாசம்
மறுபக்கம் தென் சென்னையிலும் சுவாரஸ்ய காட்சியைப் பார்க்க முடிந்தது. அங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப் பாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கலின்போது இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு கட்டித் தழுவி பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
தமிழும் தமிழும் மோதினால் என்ன.. நெட் ரிசல்ட் ஏதாவது ஒரு தமிழ்தானே வெல்லப் போகிறது.. எந்தத் தமிழ் வென்றாலும் அது தென் சென்னையை உயர்த்தப் பாடுபடட்டும்!
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
{{comments.comment}}