விஜய பிரபாகரனை ஆசிர்வதித்த ராதிகா.. கட்டிப் பிடித்துக் கொண்ட தமிழிசை தமிழச்சி.. சுவாரஸ்ய காட்சிகள்!

Mar 25, 2024,10:47 PM IST

சென்னை: விருதுநகர் தொகுதியில் இன்று பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், தேமுதிக கட்சி சார்பில்  விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டனர். தென் சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்த தமிழிசை செளந்தரராஜனும், தமிழச்சி தங்கப்பாண்டியனும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.


மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இன்று  தமிழகம் முழுவதும் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கிறது.  27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 28ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும்.




இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். சரத்குமார் சமீபத்தில் தான் பாஜக வுடன் தனது கட்சியை முழுமையாக இணைந்தார். அதன்பின்னர் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு பொதுமக்களை சந்தித்தார்.  அதன் பின்னர் மனு தாக்கல் செய்ய வந்தார்.


ராதிகா வந்தபோதுதான் விஜய பிரபாகரன் மனுத்தாக்கலை முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். விருதுநகரில் முரசு சின்னத்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். முன்னதாக தனது தாயாரும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்துடன் பராசக்தி மாரியம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் விஜயபிரபாகரனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 


வேட்பு மனு தாக்கலின்போது வெளியே வந்த விஜய பிரபாகரன், ராதிகாவைப் பார்த்து வணக்கம் வைத்தார். அவரை ராதிகா வாழ்த்தினார். சரத்குமாரும் தட்டிக் கொடுத்தார். எனது மகளுடன் சேர்ந்து படித்தவர்தான் விஜய பிரபாகரன், அவரும் எனக்கு மகன் போலத்தான் என்று ஏற்கனவே ராதிகா கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.


ராதிகாவும், விஜயபிரபாகரனும் இருவரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதினால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கடும் போட்டி நிலவி வருகின்றது. இருவரும் நட்சத்திர போட்டியாளர்கள் என்பாதால் விருதுநகர் தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது.  திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவுமான மாணிக்கம் தாகூரே மீண்டும் போட்டியிட உள்ளார். இவ்வாறாக முக்கிய பிரபலங்கள் மோதும் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.


தென் சென்னையில் சகோதரிகள் பாசம்




மறுபக்கம் தென் சென்னையிலும் சுவாரஸ்ய காட்சியைப் பார்க்க முடிந்தது. அங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப் பாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கலின்போது இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு கட்டித் தழுவி பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.


தமிழும் தமிழும் மோதினால் என்ன.. நெட் ரிசல்ட் ஏதாவது ஒரு தமிழ்தானே வெல்லப் போகிறது.. எந்தத் தமிழ் வென்றாலும் அது தென் சென்னையை உயர்த்தப் பாடுபடட்டும்!

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்