ராதிகாவுடன்.. நம்பர் பிளேட் இல்லாத புல்லட்டில் பறந்து.. வாக்கு சேகரித்த சரத்குமார்!

Apr 13, 2024,04:43 PM IST
சிவகாசி: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலில் வருவது போல புல்லட்டில் தனது மனைவி ராதிகா சரத்குமாரை ஏற்றுக்கொண்டு ஜாலியாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் நடிகர் சரத்குமார்.

படத்தில் வருவது போல ஜாலியாக அவர் புல்லட்டில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தாலும் கூட அந்த புல்லட்டில் நம்பர் பிளேட்டும் இல்லை, அதே போல சரத்குமாரும் ராதிகாவும் ஹெல்மெட்டும் அணியாமல் புல்லட்டில் சென்றதால் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராதிகா சரத்குமார். இவர் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அப்பகுதியில் முகாமிட்டு வந்த ராதிகா சரத்குமார் வாகனப் பேரணி மூலம் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ராதிகாவும் சரி அவரது கணவர் சரத்குமாரும் சரி பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர்கள்.  பலரின் மனதை வெகுவாக கவர்ந்தவர்கள். இதற்காகவே இவரை காண மக்கள் கூட்டம் அலைமோதும். இதன் மூலம் எளிதாக வாக்கு சேகரிப்பில் கலக்கி வருகிறார் ராதிகா சரத்குமார்.



இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் தலையில் ஹெல்மெட் இல்லாமல்.. நம்பர் பிளேட் இல்லாமல்.. புல்லட்டில் கணவன் மனைவி இருவரும் ஹாயாக சிவகாசி பகுதிகளில் வலம் வருகின்றனர். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி என சொல்வது வழக்கம். இது போல தேர்தல் வந்துட்டாவே சின்ராச கையில பிடிக்க முடியாது என சொல்லலாம். ஏனெனில் சரத்குமார் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கி படு ஜோராக வேலை செய்து வருவதால் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாகன பேரணி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கி வந்தனர்.

தற்போது ஒரு படி மேலே சென்று இருவரும் புல்லட்டில் வலம் வந்து மக்களை  சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

ஆனால் நம்பர் இல்லாத புல்லட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொறுப்பான ஒரு வேட்பாளராக இருப்பவர் இப்படி ஹெல்மெட் போடாமல் பயணிக்கலாமா அதுவும் நம்பர்  ப்ளேட் இல்லாத வாகனத்தில் பயணிப்பது சரியான செயலா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்