இதைக் கண்டெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை.. பிரியங்கா காந்தி ஆவேசம்

Mar 25, 2023,04:06 PM IST
டெல்லி:  ஜனநாயகத்தைக் காப்பதற்கும், தேசத்தைக் காப்பதற்கும் ரத்தம் சிந்திய குடும்பம் நாங்கள். இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று பிரியங்கா காந்தி வத்ரா ஆவேசமாக கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி ஆவேசமடைந்துள்ளது. பல்வேறு வகையான போராட்டங்களை அது கையில் எடுக்கவுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி வத்ரா இதுகுறித்து கூறுகையில், 



பாஜக செய்தித் தொடர்பாளர்களாக இருக்கட்டும், அமைச்சர்களாக இருக்கட்டும்,எம்.பிக்களாக இருக்கட்டும்.. ஏன் பிரதமரே கூட தொடர்ந்து  எனது குடும்பத்தை அவதூறாகத்தான் பேசி வந்துள்ளனர். ராகுல் காந்தி, இந்திரா காந்தி, எனது தாயார், ஜவஹர்லால் நேரு  என  அனைவரையுமே அவதூறாகத்தான் பேசி வருகின்றனர். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் மோசமாக விமர்சிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது நாட்டுக்கே தெரியும்.

எந்த நீதிபதியும் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அவர்களுக்கு விதிக்கவில்லை.. அவர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை.. இதையும் நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதானி விவகாரத்தை எனது சகோதரர் நாடாளுமன்றத்தில் பெரிதாக எழுப்பியதால்தான் இதெல்லாம் நடக்கிறது. அதானியைப் பற்றிப் பேசினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.

எங்களது குடும்பம் இந்தியாவுக்காக குரல் கொடுத்த குடும்பம். சத்தியத்திற்காக போராடிய குடும்பம். பல தலைமுறைகளாக நாட்டுக்காக உழைத்த குடும்பம். இது தேசத்திற்காகவும், ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் ரத்தம் சிந்திய குடும்பம். ராகுல் காந்தி ஒரு போதும் பணிந்து போக மாட்டார் என்று ஆவேசமாக கூறினார் பிரியங்கா காந்தி.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்