சம்பல் செல்ல முயற்சித்த ராகுல் காந்தி.. தடை போட்ட உ.பி. போலீஸ்.. டெல்லிக்கே திரும்பினார்!

Dec 04, 2024,05:59 PM IST

லக்னோ: வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு போலீசாருடன் தனியாக செல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால்  அங்குள்ள போலீசார் அனுமதிக்க மாறுப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். போலீஸார் அவரை சம்பல் பகுதிக்குச் செல்ல அனுமதிக்காத காரணத்தால் ராகுல் காந்தி டெல்லிக்குத் திரும்பிச் சென்றார்.


உத்திரப்பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி  ஜமா பள்ளிவாசல் உள்ளது. மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை சரிபாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.




அதன்படி, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதே போல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமானோர் ஆய்வு குழுவினர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது அங்கு போலீசார் சமாதனம் செய்ய முற்பட்ட நிலையிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசப்பட்டதால், போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் 4 பேர் பலியாயினர்.


வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் செல்ல திட்டமிட்டிருந்தனர்.அதன்படி  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிஸ் எம்.பிக்கள் 7 பேர் காரில் சம்பல் மாவட்டத்திற்கு இன்று புறப்பட்டனர். 


உத்திரப்பிரதேச காசியாபாத் எல்லையை நெருங்கிய போது அவர்களது காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சட்ட ஒழுங்கு காரணமாக சம்பல் பகுதிக்கு அவர்கள் செல்ல முடியாது என்று கூறி மேற்கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். நீண்ட நேரம் காவல்துறையினருடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் வாதாடினர். ஆனால் போலீஸார் தங்களது முடிவில் திட்டவட்டமாக இருந்தனர். 


இதனையடுத்து சம்பல் மாவட்டத்திற்கு செல்ல போலீசார் அனுமதி மறுப்பதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சம்பல் மாவட்டத்திற்கு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இது அரசியமைப்பு எனக்கு வழங்கியுள்ள உரிமை. போலீசாருடன் நான் மட்டும் தனியாக சம்பல் மாவட்டத்திற்கு செல்ல தயார். ஆனாலும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


நீண்ட நேரம் வாதாடியும் பலன் கிடைக்காததால் ராகுல் காந்தியும் மற்றவர்களும் டெல்லிக்கே திரும்பிச் சென்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி

news

எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்

news

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

news

அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்

news

மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்

news

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்

news

Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?

news

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்