சம்பல் செல்ல முயற்சித்த ராகுல் காந்தி.. தடை போட்ட உ.பி. போலீஸ்.. டெல்லிக்கே திரும்பினார்!

Dec 04, 2024,05:59 PM IST

லக்னோ: வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு போலீசாருடன் தனியாக செல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால்  அங்குள்ள போலீசார் அனுமதிக்க மாறுப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். போலீஸார் அவரை சம்பல் பகுதிக்குச் செல்ல அனுமதிக்காத காரணத்தால் ராகுல் காந்தி டெல்லிக்குத் திரும்பிச் சென்றார்.


உத்திரப்பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி  ஜமா பள்ளிவாசல் உள்ளது. மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை சரிபாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.




அதன்படி, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதே போல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமானோர் ஆய்வு குழுவினர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது அங்கு போலீசார் சமாதனம் செய்ய முற்பட்ட நிலையிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசப்பட்டதால், போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் 4 பேர் பலியாயினர்.


வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் செல்ல திட்டமிட்டிருந்தனர்.அதன்படி  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிஸ் எம்.பிக்கள் 7 பேர் காரில் சம்பல் மாவட்டத்திற்கு இன்று புறப்பட்டனர். 


உத்திரப்பிரதேச காசியாபாத் எல்லையை நெருங்கிய போது அவர்களது காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சட்ட ஒழுங்கு காரணமாக சம்பல் பகுதிக்கு அவர்கள் செல்ல முடியாது என்று கூறி மேற்கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். நீண்ட நேரம் காவல்துறையினருடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் வாதாடினர். ஆனால் போலீஸார் தங்களது முடிவில் திட்டவட்டமாக இருந்தனர். 


இதனையடுத்து சம்பல் மாவட்டத்திற்கு செல்ல போலீசார் அனுமதி மறுப்பதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சம்பல் மாவட்டத்திற்கு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இது அரசியமைப்பு எனக்கு வழங்கியுள்ள உரிமை. போலீசாருடன் நான் மட்டும் தனியாக சம்பல் மாவட்டத்திற்கு செல்ல தயார். ஆனாலும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


நீண்ட நேரம் வாதாடியும் பலன் கிடைக்காததால் ராகுல் காந்தியும் மற்றவர்களும் டெல்லிக்கே திரும்பிச் சென்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்