சம்பல் செல்ல முயற்சித்த ராகுல் காந்தி.. தடை போட்ட உ.பி. போலீஸ்.. டெல்லிக்கே திரும்பினார்!

Dec 04, 2024,05:59 PM IST

லக்னோ: வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு போலீசாருடன் தனியாக செல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால்  அங்குள்ள போலீசார் அனுமதிக்க மாறுப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். போலீஸார் அவரை சம்பல் பகுதிக்குச் செல்ல அனுமதிக்காத காரணத்தால் ராகுல் காந்தி டெல்லிக்குத் திரும்பிச் சென்றார்.


உத்திரப்பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி  ஜமா பள்ளிவாசல் உள்ளது. மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை சரிபாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.




அதன்படி, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதே போல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமானோர் ஆய்வு குழுவினர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது அங்கு போலீசார் சமாதனம் செய்ய முற்பட்ட நிலையிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசப்பட்டதால், போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் 4 பேர் பலியாயினர்.


வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் செல்ல திட்டமிட்டிருந்தனர்.அதன்படி  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிஸ் எம்.பிக்கள் 7 பேர் காரில் சம்பல் மாவட்டத்திற்கு இன்று புறப்பட்டனர். 


உத்திரப்பிரதேச காசியாபாத் எல்லையை நெருங்கிய போது அவர்களது காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சட்ட ஒழுங்கு காரணமாக சம்பல் பகுதிக்கு அவர்கள் செல்ல முடியாது என்று கூறி மேற்கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். நீண்ட நேரம் காவல்துறையினருடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் வாதாடினர். ஆனால் போலீஸார் தங்களது முடிவில் திட்டவட்டமாக இருந்தனர். 


இதனையடுத்து சம்பல் மாவட்டத்திற்கு செல்ல போலீசார் அனுமதி மறுப்பதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சம்பல் மாவட்டத்திற்கு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இது அரசியமைப்பு எனக்கு வழங்கியுள்ள உரிமை. போலீசாருடன் நான் மட்டும் தனியாக சம்பல் மாவட்டத்திற்கு செல்ல தயார். ஆனாலும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


நீண்ட நேரம் வாதாடியும் பலன் கிடைக்காததால் ராகுல் காந்தியும் மற்றவர்களும் டெல்லிக்கே திரும்பிச் சென்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்