பஹல்காம் தாக்குதல்.. நாடு திரும்பினார் பிரதமர் மோடி.. தீவிரவாதிகளுக்கு ராகுல் காந்தி கண்டனம்!

Apr 23, 2025,06:35 PM IST

டெல்லி: பஹல்காம் சுற்றுலா பகுதியில் நடந்திருக்கும் பயங்ரவாதிகளின் தாக்குதல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி.அதேபோல் இந்த  தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதிகளில்  நேற்று அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி போர்க்கள பூமியாக  மாறியது. பயங்கரவாதிகள்  சுற்றுலாப் பயணிகளை  சுட்டுக் படுகொலை செய்யப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர் இருவர் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.


தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து ஸ்ரீ நகர் பகுதியில்  கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.  இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் உலகளாவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சென்றிருந்த நிலையில், தீவிரவாத தாக்குதலை கேட்டறிந்த உடனேயே சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். அங்கு டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதே சமயத்தில் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.


இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 




காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது  நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ள செய்தி வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். 


ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று பட்டு உள்ளது. அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறாமல், அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடக்காது; அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்

news

எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி

news

எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்

news

ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி

news

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்

news

கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

news

20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

news

புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை

news

ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்