திடீர் பயணமாக இன்று மாலை.. சென்னை வருகிறார்.. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Feb 11, 2025,02:18 PM IST

சென்னை:  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீர் பயணமாக இன்று மாலை சென்னைக்கு வர இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று வந்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு இன்று மாலை ரயிலில் வருகிறார். இதனை தொடர்ந்து சென்னையில் சில மணி நேரம் தங்கி விட்டு பிறகு மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு பயணிக்க இருக்கிறார். 


இதனால்  சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னைக்கு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்க தமிழக காங்கிரஸ் தொண்டர்கள்  திட்டமிட்டுள்ளனர்.




சென்னையில் சில மணி நேரம் தங்கி இருப்பதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.  2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள நேற்று  அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ராகுல் காந்தியின் சந்திப்பில் இது குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்