சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீர் பயணமாக இன்று மாலை சென்னைக்கு வர இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று வந்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு இன்று மாலை ரயிலில் வருகிறார். இதனை தொடர்ந்து சென்னையில் சில மணி நேரம் தங்கி விட்டு பிறகு மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு பயணிக்க இருக்கிறார்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்க தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் சில மணி நேரம் தங்கி இருப்பதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ராகுல் காந்தியின் சந்திப்பில் இது குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}