வட தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. தகிக்கிறது ஈரோடு!

May 04, 2024,09:50 PM IST
சென்னை:  தமிழ்நாட்டின் வட உட்புற மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என்றும், 7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் நிலவரம் மற்றும் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை



வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 44.4 டிகிரி செல்சியஸ் (110 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். தமிழகத்தில் ஐந்து இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 - 43 செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 42.5 (108.5) வேலூரில் 42.5 (108.5) திருத்தணியில் 42.5 (108.5),  மதுரை நகரம்  41.2 (106.16) திருச்சி 40.7 (105.26), சேலம் 40.5  (104.9) தர்மபுரி 40.2 (104.36), பாளையங்கோட்டை 40.2 (104.36) மதுரை விமான நிலையம் 40.1 (104.18) பதிவாகியுள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 - முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 40.2 செல்சியஸ் வெப்பநிலையும் நுங்கம்பாக்கத்தில் 38.1 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

7 மற்றும் 8ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏழாம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக,  தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

எட்டாம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்