கரையை கடந்த "மிதிலி".. இனி வரும் இனிய மழை..  இன்றும் நாளையும் நன்றாக நனைக்கும்!

Nov 18, 2023,02:25 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கதேசத்தில் நேற்று மிதிலி புயல் கரையை கடந்து விட்டதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த அழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, புயலாக மாறி, நேற்று வங்கதேசம் அருகே புயல் கரையைக் கடந்தது.இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.


இன்று  கன மழை பெய்யும் மாவட்டங்கள்:




ராமநாதபுரம் ,தேனி ,தென்காசி ,நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி, மயிலாடுதுறை ,தஞ்சை, திருவாரூர் ,நாகை ,புதுக்கோட்டை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கன மழை பெய்யும் மாவட்டங்கள்:


புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழை எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்