சென்னை: வேலூர் ராணிப்பேட்டை பெல்ட்டிலிருந்து மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்வதாகவும், அடுத்த 2 மணி நேரத்தில் மழை சென்னையை வந்தடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று இரவு செமத்தியான மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. பலத்த காற்றுடன் கூடிய இந்த மழையானது, ஜூலை மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட அதிகமாகவே இருந்தது மக்களை மகிழ்வித்துள்ளது.
இந்த மாலை அல்லது இரவு நேர மழையானது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் இரவு நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், மாலை நேரம் வந்தாச்சு. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைக்கு மழை எப்படி இருக்கும் என்பதை கண்காணிக்கும் நேரம் இது. வேலூர் - ராணிப்பேட்டை பகுதியிலிருந்து இப்போதுதான் மேகக் கூட்டம் கிளம்பியுள்ளது. 2 மணி நேரத்தில் சென்னையை வந்தடையும்.
ஈரோடு - சேலம் நாமக்கல் பெல்ட்டிலும் மழை காணப்படுகிறது. இந்த மழையானது அப்படியே திருச்சி, கரூர், பெரம்பலூர் பக்கம் போகக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய அப்டேட்:
இதற்கிடையே, இரவு 8.30 மணிக்குள் வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}