சென்னை: தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் தற்போது கன மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யும். இது தவிர சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோட்டிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வரும் மே 16ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}