ஹையா.. தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. பிரதீப் ஜான் அறிவிப்பு!

May 14, 2024,02:11 PM IST

சென்னை: தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துள்ளனர்.  இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்




ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் தற்போது கன மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யும். இது தவிர சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோட்டிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னையைப் பொருத்தவரை வரும் மே 16ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்