சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் அதாவது ஜூன் 11ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான பகுதிகளில் வெப்ப சலனத்தால் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி எடுத்தாலும் இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதேபோல் காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம், கூவத்தூர், கல்பாக்கம் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இது தவிர சீர்காழி, விழுப்புரம், மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இரவு நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தற்போது வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக வேறுபாடு காரணமாக ஜூன் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும் எனவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு:
நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய 8 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோடம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நம்பியூர், திருவள்ளூர், தேனாம்பேட்டை, சிவகங்கை, பனப்பாக்கம், வளசரவாக்கத்தில், தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}