சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ரெமல் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் மழை படிப்படியாகக் குறைந்து வெப்ப அலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அச்சச்சோ.. மறுபடியும் வெப்ப அலையா.. அது பயங்கரமானதாச்சே.. என்று மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலகட்டத்திற்கு முன்பே வெயில் கோரத்தாண்டவம் ஆடியது. அப்போது பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருந்தது. மே மாத தொடக்கத்தில் வெயில் படிப்படியாக அதிகரித்து உச்சக்கட்டத்தை எட்டியது. ஈரோடு, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இது தவிர தமிழக அரசும் கோடை வெப்பத்தை சமாளிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இந்த நிலையில்தான், கோடை காலத்தை சமாளிக்க இயற்கையே மக்களுக்கு கருணை காட்டியது போல தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பரவலாக கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து கடந்த ஒரு வார காலமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளனர். வெளியில் போய் சுத்தி விட்டு வந்தாலும்.. எனக்கு வேர்க்கலியே.. ஹய்யா ஜாலி என்று கலகலப்பாக உலா வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாக உள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நீர் வரத்து அதிகரித்துள்ளது.
புயல் புண்ணியத்தால்.. வெயில் வெளுக்கும்
ஆனால் இந்தப் புயல்தான் தற்போது தமிழ்நாட்டு மக்களின் சந்தோஷத்திற்கு ஆப்பு வைக்கப் போகிறதாம். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் புயல் உருவாகி சூறாவளி காற்று வீசி வந்தாலும், தமிழகத்தில் மழை அளவு படிப்படியாக குறையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மழை தொடரும். இது தவிர தென் தமிழக மாவட்டங்களான மதுரை, நெல்லை, வால்பாறை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
ஆந்திராவை ஒட்டி உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் மீண்டும் தலை தூக்கும். வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீச கூடும். குறிப்பாக ராஜஸ்தானில் வரும் நாட்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
புயல் நகர நகர தமிழ்நாட்டின் மீது நிலவும் ஈரப் பதத்தையும் சேர்த்து உறிஞ்சி எடுத்துச் சென்று விடும் என்பதால்தான் நமக்கு வெயில் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}