- அ.சீ.லாவண்யா
எங்கு பார்த்தாலும் மழையாக இருக்கிறது. மழைக்காலம் வந்து விட்டாலே காலை தரையில் வைக்க முடியாது. எங்கும் ஈரம், எதிலும் நச நசதான். இப்படிப்பட்ட நிலையில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சாப்பாடு முதல் வீட்டுப் பராமரிப்பு வரை நிறைய விஷயங்களில் இந்த மழைக்காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சில கவனங்கள் குறித்த டிப்ஸ் இப்போது பார்க்கலாம்.

வெளியில் செல்லும்போது எப்போதும் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்லுங்கள்.
மழையில் நனைந்து விட்டால் ஈரமாக இருக்காதீர்கள். உடைகளை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
கொதிக்கவைத்த அல்லது வடிகட்டிய நீரையே குடிக்கவும்.
மழைக்காலத்தில் சாலையோர பானங்கள் போன்ற, குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.
வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்
சூடான, (சமீபத்தில் சமைத்த) உணவையே சாப்பிடுங்கள்.
மழைக்காலத்தில் சாலையோரச் சாலட், சாலையோர உணவுகள் தவிர்க்கவும். முக்கியமாக junk food தவிர்க்கவும்.
மழை நேரங்களில் மெதுவாக வாகனம் ஓட்டுங்கள்.
தண்ணீர் நிரம்பிய சாலைகளில் செல்ல வேண்டாம்.
வாகனத்தின் லைட், வைபர் சரி நிலையில் உள்ளதா என சரிபார்க்கவும்.
கூரை, சுவர்களில் நீர்க்கசிவு இருந்தால் உடனே சரிசெய்யவும்.
மழைநீர் வடிகால் குழாய்கள் அடைப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
அவசரத்திற்காக டார்ச்சு, பவர் பேங்க் போன்றவை வைத்திருக்கவும்.
சூடான பானங்கள் அருந்தி உடலை சூடாக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது டீ,காப்பி போன்றவை.
அடிப்படை மருந்துகள் கொண்ட முதல் உதவி பெட்டியை வைத்திருக்கவும்.
நீர்ப்புகா செருப்பு அல்லது Shoes அணியவும்.
லேசான, விரைவில் உலரும் ஆடைகளை பயன்படுத்துங்கள்.
மின்சார ஸ்விட்ச் உள்ள சுவரில் ஈரப்பதம் இருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள். இருந்தால் எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டு பராமரிக்க மறக்காதீர்கள்.
இவையெல்லாம் படித்தவுடன் நிறுத்திவிடாதீர்கள் ஜஸ்ட் follow பண்ணுங்க. மழை காலத்தில் பாதுகாப்புடன் இருங்க.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
Tamil Nadu Assembly elections: படு விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. அதிர வைக்கும் 1 மணி நிலவரம்!
நட்பு.. என்றும் நிலைத்து இருக்கும் வானம்!
எங்க ஊரு பாட்டு!
புத்தகம்.. அறிவு, ஒழுக்கம், சிந்தனை, கற்பனையை வளர்க்கும் சிறந்த கருவி!
World Book Day: புத்தகங்கள் அறிவை வளர்க்கட்டுமே, சுமையை அல்ல!
{{comments.comment}}