ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர், வாக்குச் சாவடி அதிகாரியை சரமாரியாக அடித்து உதைத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்தது. அதில் ஒரு தொகுதிதான் தியோலி யுனியாரா. இந்தத் தொகுதியில் நரேஷ் மீனா என்ற சுயேச்சை வேட்பாளரும் களத்தில் இருக்கிறார். சம்விரதா என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு நரேஷ் மீனா சென்றார். உள்ளே சென்ற அவர் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி அமித் செளத்ரியுடன் கடுமையான வாக்குவாதம் புரிந்தார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அமித் செளத்ரியை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். அமித் செளத்ரி வெளியில் ஓடி வந்து தப்பிக்க முயன்றும் கூட விடாமல் துரத்தி துரத்தி அடித்தார் நரேஷ் மீனா. இதனால் அந்த இடமே பரபரப்பானது. உடனடியாக போலீஸார் விரைந்து வந்து நரேஷ் மீனாவை மடக்கிப் பிடித்து நிறுத்தினர்.
சுயேச்சை வேட்பாளர் மீனா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இவருக்கு சீட் தராததால் கடுப்பான நரேஷ் மீனா சுயேச்சையாக போட்டியிடுகிறார். வாக்குச் சாவடி அதிகாரியை அடித்தது குறித்து நரேஷ் மீனா கூறுகையில், 3 பேரை வைத்து கள்ள ஓட்டு போட அனுமதித்துள்ளார். அதிகாரி அமித் செளத்ரி. அவருக்கு போலீஸாரும் உடந்தையாக இருந்தனர். இதனால்தான் அடித்தேன் என்று கூறினார் நரேஷ் மீனா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}