சிவகாசி: எடப்பாடியார் விரல் வீட்டுகிறவர்தான் அடுத்து பிரதமராக வர வேண்டும்.. அல்லது அவரே பிரதமராக வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
சிவகாசியில் நடந்த அதிமுக கூட்டத்தில்தான் இப்படிப் பேசி கலகலக்க வைத்தார் ராஜேந்திர பாலாஜி. எடப்பாடி பழனிச்சாமிக்கு தீவிரமான ஆதரவு காட்டும் தென் மாவட்டத் தலைவர்களில் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியை, "மோடி எங்களுக்கு டாடி" என்றும் சொல்லி அதிர வைத்தவரும் கூட.

இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் குறித்து பெரிதாக கருத்து கூறாமல் இருந்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் சமீபத்தில் அவர் அடுத்த பிரதமராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்று பேசியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பலமாக சிரித்து விட்டு, இதுதான் பதில் என்று கூறி விட்டு நகர்ந்தார் அண்ணாமலை.
இந்தச் சூழ்நிலையில் நேற்று சிவகாசியில் நடந்த அதிமுக கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசும்போது இதற்குப் பதிலடி கொடுப்பது போல பேசினார். அவரது பேச்சிலிருந்து:
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், எடப்பாடியார் தலைமையில், அவர் விரல் நீட்டுகிறவர் பிரதமராக வர வேண்டும். அல்லது அவரே பிரதமராக வர வேண்டும். இதைச் சொன்னதும் சில பேர் நக்கல் ஜோக் என்று சொல்கிறார்கள்.
ஒரே ஒரு எம்பியை வைத்திருந்த ஐ.கே.குஜ்ரால் பிரதமராக வரலையா. சந்திரசேகர் பிரதமராகலையா. கர்நாடகத்தில் தேவெ கெளடா பிரதமராக வரலையா. ஒரு எம்.பி,10 எம்பிக்கள் வைத்திரவர்கள் எல்லாம் பிரதமராக வரும்போது 2 கோடி உறுப்பினர்கள் வைத்திருக்கும் மாபெரும் இயக்கமான அதிமுகவின் பொதுச் செயலாளர் ஏன் வர முடியாது.
இந்தியாவின் 3து பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அதிமுகவை உட்கார வைத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அப்படிப்பட்ட இயக்கம் வீழ்ந்து விடுமா. வீழ்ந்து விடும் என்று கனவு காண்பவர்கள் பகல் கனவு காணாதீர்கள். புது எழுச்சியோடு, புது உத்வேகத்தோடு அதிமுக மீண்டும் எழுந்து வரும்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும். அதேபோல சட்டசபைத் தேர்தலிலும் வெல்வோம். அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களித்து அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று பேசினார் ராஜேந்திர பாலாஜி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}