அக்டோபர் 10ம் தேதி.. வேட்டையன் தியேட்டருக்கு வருது... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தகவல்!

Jun 03, 2024,01:16 PM IST

- இந்துமதி


சென்னை: அக்டோபர் 10ம் தேதி தான் நடித்து வரும் வேட்டையன் படம் திரைக்கு வருவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் மிகப் பெரிய ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமான படம்தான் வேட்டையன். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் நடித்துள்ளனர்.


அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் என லிஸ்ட் பெரிதாகவே இருக்கிறது. ஜெய் பீம் படத்தை இயக்கியவர் ஞானவேல் என்பதால் இந்தப் படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜெய் பீம் படத்தைப் போலவே இதிலும் ஆழமான சமூகக் கருத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரிய பெரிய ஸ்டார்கள் நடித்திருப்பதால் அதுவும் எதிர்பார்ப்பை பலமாக கிளப்பியுள்ளது.




இந்த நிலையில் இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று ரஜினியே தகவல் தெரிவித்துள்ளார். வேட்டையன் ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில் தனது இமயமலைப் பயணத்தை ரஜினிகாந்த் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தின்போதுதான் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.


வேட்டையன் படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு இந்த வாரம் தமிழ்நாடு திரும்புகிறார். அதன் பின்னர் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கூலி படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்