நாளை ராமநாதபுரம் வருகிறார் ராஜ்நாத் சிங்

Jun 19, 2024,01:16 PM IST

ராமநாதபுரம்:  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம்நாத் சிங் நாளை ராமநாதபுரத்திற்கு வருகிறார்.ஜூன் 21 ம் தேதி உலக யோகா தினத்தையொட்டி தனுஷ்கோடியில் நடக்கும் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.


யோகா என்பது உடல் நிலைகள், சுவாச நுட்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான பயிற்சி ஆகும். இது மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. 




மேலும் ஆரோக்கியமான நெகிழ்வான நிலையை மேம்படுத்துகின்றது. நினைவு, கவனம், விழிப்புணர்வு, சிந்தனை மற்றும் மொழி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் மூளையின் பாகங்களை யோகா பலப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது யோகா. சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


இத்தகைய சிறப்புடைய யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ராமநாதபுரத்திற்கு நாளை மாலை  தனி ஹெலிகாப்டரில் வருகிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். முதலில் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்று அவர் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்று ஆய்வு நடத்துகிறார். 


அதன்பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனையில், ஜூன் 21ம் தேதி காலை 6 மணியளவில் நடைபெறும் கடலோர காவல் படை, விமானப்படை, கடற்படை, மெரைன் போலீசாரின் யோகா  தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கலெக்டர்,  எஸ்பியும் கலந்து கொள்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்