விழுப்புரம்: பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து நீடித்து வருகின்றன. டாக்டர் ராமதாஸிற்கு ஆதரவாக எம்.எல்.ஏ அருள் செயல்பட்டு வருகிறார். இவரை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசுகையில்,
பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ஜிகே மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. என் மனம் வேதனை படும் அளவு செய்கின்றனர். எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு நான் கட்சியை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றேன்.

கட்சியின் இணை செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார். பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பாமக மகளிர் மாநாடு நடத்துகிறோம். அதிமுக திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. பாமக செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு கருத்துக்களை கேட்ட பிறகுதான் கூட்டணி குறித்து பதில் சொல்ல முடியும்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் இதர சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலைகளில் சீரமைப்பு பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு குடும்பத்தாருக்கு ரூபாய் ஒரு கோடியில் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}