விழுப்புரம்: பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து நீடித்து வருகின்றன. டாக்டர் ராமதாஸிற்கு ஆதரவாக எம்.எல்.ஏ அருள் செயல்பட்டு வருகிறார். இவரை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசுகையில்,
பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ஜிகே மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. என் மனம் வேதனை படும் அளவு செய்கின்றனர். எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு நான் கட்சியை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றேன்.
கட்சியின் இணை செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார். பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பாமக மகளிர் மாநாடு நடத்துகிறோம். அதிமுக திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. பாமக செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு கருத்துக்களை கேட்ட பிறகுதான் கூட்டணி குறித்து பதில் சொல்ல முடியும்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் இதர சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலைகளில் சீரமைப்பு பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு குடும்பத்தாருக்கு ரூபாய் ஒரு கோடியில் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}