"ஒரே நாடு ஒரே தேர்தல்".. ராம்நாத் கோவிந்த் அன்றே சொல்லிட்டாரே!

Sep 03, 2023,10:04 AM IST
டெல்லி: குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை தற்போது பாஜக கையில் எடுத்துள்ளது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போதே மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்பது பாஜகவின் திட்டம். இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பல்வேறு நிபுணர்கள் கடும் ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.



ஆனால் இதுகுறித்து முடிவெடுக்க ஒரு உயர் மட்டக் கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் கமிட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா,  லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ரஞ்சன் செளத்ரி ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் எட்டு பேர் கொண்ட குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு என்ன மாதிரியான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கப் போகிறது என்பது ஒரு எதிர்பார்ப்புக்குரியதாக உள்ள  நிலையில் குழுவின் தலைவரான ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக இருந்தபோது என்ன சொல்லியிருந்தார் என்ற பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.

2018ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பேசும்போது, இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதியில் அவ்வப்போது ஏதாவது தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இது மக்களை சோர்வடையச் செய்கிறது, கவலைக்குள்ளாக்குகிறது. இது நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியையும் பாதிப்படையச் செய்கிறது.

அடிக்கடி தேர்தல் நடத்துவது  தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கும் பெரும் சோர்வைக் கொடுக்கும். மனித வளம் வீணாக்கப்படும்.  வளர்ச்சித் திட்டங்களையும் நம்மால் செய்ய முடியாமல் போகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் முட்டுக்கட்டைகளும் ஏற்படுகின்றன. எனவே ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியிருந்தார் ராம்நாத் கோவிந்த்.

அப்போதே ராம்நாத் கோவிந்த் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது அதே பாணியிலான முடிவுக்குத்தான் இந்தக் கமிட்டியின் கருத்தும் அமையும் என்று கருதப்படுகிறது. மேலும் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தும் மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்