சென்னை: டியர் கம்ரேட் படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்படம் குறித்த நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் கீதா கோவிந்தம் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் இணைந்து நடித்த படம் டியர் காம்ரேட். இப்படம் வெளி வந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்த படம் மெகா ஹிட் அடித்ததால், இந்த படத்தின் 5 ஆண்டு நிறைவை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

டியர் காம்ரேட் படம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் ராஷ்மிகா. அவர் வெளியிட்ட பதிவில், டியர் காம்ரேட் படத்தை நேசித்த மற்றும் தொடர்ந்து நேசிக்கும் அனைவருக்கும் நன்றி. டியர் காம்ரேட் படத்திற்குப் பிறகு தான் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்றும் பலர் என்னை லில்லி என்றே அழைக்கின்றனர். படப்பிடிப்பு முழுவதும் சிரிப்பும் கண்ணீரும் நிறைந்து இருந்தது. இப்படம் குறித்த ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது யுன்று தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இருப்பினும் அவரது புஷ்பா 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கும் இயக்குனர் சுகுமாறனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்
இயற்கையில் ஏன் .. இந்த முரண்பாடு?
வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
திருக்குறள் திருவிழா.. மூத்த குடிமக்கள், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவம்!
இனிமை சேர்ந்திடவே இதயமும் மகிழ்ந்திடவே.. காணும் பொங்கல்!
{{comments.comment}}