நடிகர் ரவி மோகன், முன்பு ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டவர். தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை இன்று வெளியிட்டார்.
யோகி பாபுவுடன் இணைந்து தனது முதல் படத்தை ரவி மோகன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்தை வெளியிட்ட பிறகு, ரவி மோகன் கெனிஷா பிரான்சிஸுடன் குன்றக்குடி முருகன் கோவிலுக்குச் சென்றார். ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் யோகி பாபு நடிக்கும் படம் தான் இந்த நிறுவனத்தின் முதல் படமாக இருக்கும்.
ரவி மோகன் தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விரைவில் புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளார்.
மறுபக்கம் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் இடையிலான பிரச்சினையை வழக்கு முடியும் வரை பொது வெளியில் பகிரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.
ஒரு நடிகராக தனித்துவத்தை நிரூபித்தவர் ரவிமோகன். தற்போது அவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் யோகி பாபு இயக்குநராக அவதாரம் எடுக்கப் போவது மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி படத்தில் கலக்கியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?
வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
{{comments.comment}}