நடிகர் ரவி மோகன், முன்பு ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டவர். தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை இன்று வெளியிட்டார்.
யோகி பாபுவுடன் இணைந்து தனது முதல் படத்தை ரவி மோகன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்தை வெளியிட்ட பிறகு, ரவி மோகன் கெனிஷா பிரான்சிஸுடன் குன்றக்குடி முருகன் கோவிலுக்குச் சென்றார். ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் யோகி பாபு நடிக்கும் படம் தான் இந்த நிறுவனத்தின் முதல் படமாக இருக்கும்.
ரவி மோகன் தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விரைவில் புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளார்.

மறுபக்கம் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் இடையிலான பிரச்சினையை வழக்கு முடியும் வரை பொது வெளியில் பகிரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.
ஒரு நடிகராக தனித்துவத்தை நிரூபித்தவர் ரவிமோகன். தற்போது அவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் யோகி பாபு இயக்குநராக அவதாரம் எடுக்கப் போவது மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி படத்தில் கலக்கியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}