டில்லி : இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 7.2 சதவீதத்திலிருந்து சரிந்து 6.6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்த முக்கிய அம்சங்களை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று (டிசம்பர் 06) வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், 2024-2025ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் குறையும். அதே சமயம் நான்காவது காலாண்டில் 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி பெறும். தற்போதைய காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவுடன் காணப்பட்டாலும், அடுத்த காலாண்டில் உயர்வடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

2024ம் ஆண்டின் அக்டோபர் மாதம் நடைபெற்ற பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்பட்டது. நிதி அமைச்சகம் பார்லிமென்டில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையிலும் இதுவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
அதே சமயம் ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதத்திலேயே இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து 11வது முறையாக ரெபோ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கம், சரிந்து வரும் பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என இன்று நடைபெற்ற பணக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அதோடு ரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் ரியல் எஸ்டேட் துறையில் லாபம் அதிகரிக்கும். இதனால் வீடு, மனை ஆகியவற்றின் விலைகளும் உயருவற்கான வாய்ப்பு கிடையாது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}