டில்லி : இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 7.2 சதவீதத்திலிருந்து சரிந்து 6.6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்த முக்கிய அம்சங்களை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று (டிசம்பர் 06) வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், 2024-2025ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் குறையும். அதே சமயம் நான்காவது காலாண்டில் 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி பெறும். தற்போதைய காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவுடன் காணப்பட்டாலும், அடுத்த காலாண்டில் உயர்வடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

2024ம் ஆண்டின் அக்டோபர் மாதம் நடைபெற்ற பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்பட்டது. நிதி அமைச்சகம் பார்லிமென்டில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையிலும் இதுவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
அதே சமயம் ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதத்திலேயே இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து 11வது முறையாக ரெபோ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கம், சரிந்து வரும் பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என இன்று நடைபெற்ற பணக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அதோடு ரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் ரியல் எஸ்டேட் துறையில் லாபம் அதிகரிக்கும். இதனால் வீடு, மனை ஆகியவற்றின் விலைகளும் உயருவற்கான வாய்ப்பு கிடையாது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}