RBI Report: இந்தியாவின் பொருளாதாரம் சரிகிறதா? ஆர்பிஐ கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

Dec 06, 2024,04:54 PM IST

டில்லி : இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 7.2 சதவீதத்திலிருந்து சரிந்து  6.6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 


இந்தியாவின் பொருளாதாரம் குறித்த முக்கிய அம்சங்களை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று (டிசம்பர் 06) வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், 2024-2025ம் நிதி ஆண்டின்  மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் குறையும். அதே சமயம் நான்காவது காலாண்டில் 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி பெறும். தற்போதைய காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவுடன் காணப்பட்டாலும், அடுத்த காலாண்டில் உயர்வடையும் என்ற நம்பிக்கை உள்ளது.




2024ம் ஆண்டின் அக்டோபர் மாதம் நடைபெற்ற பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்பட்டது. நிதி அமைச்சகம் பார்லிமென்டில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையிலும் இதுவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.


அதே சமயம் ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதத்திலேயே இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து 11வது முறையாக ரெபோ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கம், சரிந்து வரும் பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என இன்று நடைபெற்ற பணக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


அதோடு ரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் ரியல் எஸ்டேட் துறையில் லாபம் அதிகரிக்கும். இதனால் வீடு, மனை ஆகியவற்றின் விலைகளும் உயருவற்கான வாய்ப்பு கிடையாது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்