கும்பமேளாவுக்குப் போன இடத்தில்.. அணி ஜெர்சியை ஆற்றில் முக்கி எடுத்த ஆர்.சி.பி. ரசிகர்!

Jan 24, 2025,03:01 PM IST

லக்னோ: மகா கும்பமேளாவில் ஆர்சிபி அணியின் ஜெர்சியை (சீருடையை) ரசிகர் ஒருவர் மூன்று முறை நீரில் நனைத்தெடுக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில்,  இந்த முறையாவது பெங்களூரு அணி ஜெயிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாகும். வீராட் கோலி உள்பட பல சூப்பர் ஸ்டார்கள் அந்த அணியில் உள்ளனர். அதிரடியான அணியும் கூட. கடந்த 17 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 2009, 2011 மற்றும் 2016 இல்  சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறியது ஆர்சிபி அணி. ஆனாலும் வெற்றியை நிலை நாட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 




17 வருடங்களாக, ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடினாலும் ரன்கள் சேகரித்தாலும் என்னவோ தெரியவில்லை இதுவரை ஒரு தடவை கூட கோப்பையை கைப்பற்றியதே இல்லை. ஐபிஎல் பிரீமியர் லீக்கின் வரலாற்றில் சாதனை படைத்த வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றிருப்பதால் பெங்களூர் அணி வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் ஆர்சிபி ரசிகர்கள் இந்த முறையாவது நமக்குக் கப் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனாலும் இது வரை கிடைத்தபாடில்லை. இது எல்லோருக்குமே ஆச்சரியம்தான், வருத்தம்தான்.


ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களில் மத்தியில் களமிறங்கும்  ஆர் சி பி ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அதிகரித்தது. இதனால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஆர் சி பி அணி நல்லா விளையாடுறீங்க. ஆனா கப்பு மட்டும் ஜெயிக்க மாட்டேங்கிறீங்க என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் உள்ளன.


ஆர்சிபி அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சரியான பவுலர்கள் இல்லாத காரணத்தால் தான் தொடர் சரிவை சந்தித்து வருகிறது என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து  வந்தனர். இதனை கருத்தில் கொண்டுதான் கடந்த நவம்பர் 24 & 25-ஆம் தேதிகளில் சவுதி அரேபியா  ஜெட்டாநகரில் நடைபெற்ற ஐபிஎல் 18ஆவது சீசன் மெகா ஏலத்தில் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முக்கியமான பவுலர்களை ஏலத்தில் எடுத்தனர்.


ஆர்சிபி அணியில் தற்போது  விராட் கோலி உள்பட பல முக்கியமான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் ஆர் சி பி அணி இந்த முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி இந்த முறையாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் ஆர் சி பி அணியின் ஜெர்சியை மூன்று முறை ரசிகர் ஒருவர் நீரில் நனைத்தெடுத்தார் (அதாவது புனித நீராடுதல் போல‌. ரசிகரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் 

ஆர் சி பி வரும் ஐபிஎல் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுக்காகவாவது இந்த முறை கப்பை அடிச்சுடுங்கப்பா.. அந்த ரசிகர் மனசு சந்தோஷப்படும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்