பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் சில கர்ட்டசியை கடைப்பிடிக்கத் தவறி விட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நேற்று மிக முக்கியமான ஐபிஎல் லீக் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் யார் வென்றாலும் அவர்களே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்பதால் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. இந்த மோதலில் பெங்களூரு அணியின் ஆவேசத்துடன் ஆக்ரோஷமும் சேர்ந்து கொண்டதால் சென்னை அணி தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

சென்னை அணியும் கடைசி வரை விடாமல் போராடவே செய்தது. ஆனால் தோனி எப்போது அவுட் ஆனாரோ அப்போதே மனதளவில் சோர்ந்து போய் விட்டனர் சென்னை வீரர்கள். கடைசி 5 பந்தில் 11 ரன்கள் என்ற எளிதான இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தோனி நேற்று அட்டகாசமாக ஆடினார். ஒரு போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக விளக்கிக் காட்டினார் தனது பிரில்லியன்ட்டான பேட்டிங் மூலம். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே போனது. அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அதற்குக் காரணம் அவர் அடித்த அந்த சிக்ஸர்தான். வெளியில் போன பந்துக்குப் பதிலாக புதிய பந்து எடுக்கப்பட்டதால் அந்தப் பந்து தோனியை பதம் பார்த்து விட்டது. ஒரு வேளை தோனி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் பிளே ஆப்பில் இன்று சென்னை அணி இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு.
இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை கிரிக்ட்பஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தோனி அவுட்டானதை பெங்களூரு கொண்டாடியிருக்கக் கூடாது. மாறாக அவரிடம் சென்று கை குலுக்கியிருக்க வேண்டும். காரணம் இது தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம்.. அவரது கிரிக்கெட் வாழ்வில் கடைசி ஆட்டமாகவும் இது இருக்கலாம். ஆனால் இந்த இரண்டையும் ஆர்சிபி நேற்று செய்யவில்லை.
தோனி சாதாரண வீரர் அல்ல.. அவர் மிகப் பெரிய ஐக்கானிக் வீரர். அவர் போன்ற ஒரு வீரர் வருவது அரிதானது. எனவே அவரை ஆர்சிபி கெளரவப்படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார். இதை கருத்தையே கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளேவும் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}