பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் சில கர்ட்டசியை கடைப்பிடிக்கத் தவறி விட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நேற்று மிக முக்கியமான ஐபிஎல் லீக் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் யார் வென்றாலும் அவர்களே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்பதால் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. இந்த மோதலில் பெங்களூரு அணியின் ஆவேசத்துடன் ஆக்ரோஷமும் சேர்ந்து கொண்டதால் சென்னை அணி தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

சென்னை அணியும் கடைசி வரை விடாமல் போராடவே செய்தது. ஆனால் தோனி எப்போது அவுட் ஆனாரோ அப்போதே மனதளவில் சோர்ந்து போய் விட்டனர் சென்னை வீரர்கள். கடைசி 5 பந்தில் 11 ரன்கள் என்ற எளிதான இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தோனி நேற்று அட்டகாசமாக ஆடினார். ஒரு போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக விளக்கிக் காட்டினார் தனது பிரில்லியன்ட்டான பேட்டிங் மூலம். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே போனது. அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அதற்குக் காரணம் அவர் அடித்த அந்த சிக்ஸர்தான். வெளியில் போன பந்துக்குப் பதிலாக புதிய பந்து எடுக்கப்பட்டதால் அந்தப் பந்து தோனியை பதம் பார்த்து விட்டது. ஒரு வேளை தோனி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் பிளே ஆப்பில் இன்று சென்னை அணி இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு.
இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை கிரிக்ட்பஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தோனி அவுட்டானதை பெங்களூரு கொண்டாடியிருக்கக் கூடாது. மாறாக அவரிடம் சென்று கை குலுக்கியிருக்க வேண்டும். காரணம் இது தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம்.. அவரது கிரிக்கெட் வாழ்வில் கடைசி ஆட்டமாகவும் இது இருக்கலாம். ஆனால் இந்த இரண்டையும் ஆர்சிபி நேற்று செய்யவில்லை.
தோனி சாதாரண வீரர் அல்ல.. அவர் மிகப் பெரிய ஐக்கானிக் வீரர். அவர் போன்ற ஒரு வீரர் வருவது அரிதானது. எனவே அவரை ஆர்சிபி கெளரவப்படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார். இதை கருத்தையே கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளேவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}