சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பங்கள் கொடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மிகப் பெரிய திட்டம் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அதற்கு முதல் நாளிலிருந்தே பயனாளிகளுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதைக்கு 1.06 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பலருக்கும் உதவித் தொகை வரவில்லை என்ற புகார் கிளம்பியுள்ளது. மேலும் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இந்த நிலையில் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் அவர்கள் இன்று முதல் இசேவா மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று விண்ணப்பிப்போருக்கு அடுத்த 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}