மதுரை: வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், மதுரை வைகையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கோரிப்பாளையத்தில் தரைப் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது அந்த சுழற்சியானது விலகி விட்டது. அரபிக் கடலுக்குள் போய் விட்டது.
இருப்பினும் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையினால், வைகை ஆணையில் நீர்வரத்து அதிகரித்தது. அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், மதகுகள் வழியாக தற்போது 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு 3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை கரையோரம் உள்ள மக்கள் யாரும் ஆற்றில் இறங்கக்கூடாது என்றும், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தற்பொழுது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மதுரை வைகை ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்துச் செல்வதால் கோரிப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து அந்தப் பகுதியில் ஸ்தம்பித்துள்ளது. ஆரப்பாளையத்தில் இருந்து தெப்பக்குளம் விரகனூர் வரை நகருக்குள் நுழையாமல் வைகை கரையோரம் செல்லும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. செல்லூர்- ஆழ்வார்புரத்திற்கும் இடையே பேச்சி அம்மன் படித்துறை பகுதியில் இருந்து ஓபுலா படித்துறை பாலம் செல்வதற்கு இரண்டு கரை ரோட்டிலும் ஆற்றுத்தண்ணீர் 2 அடி உயரத்தில் பாய்ந்து செல்கிறது.
ஆற்றை ஒட்டி ரோடு தரை மட்டமாக இருந்ததால் வெள்ளம் பாய்ந்து ஓடும்போது கரை ரோடுகளில் ஆறாக மாறிவிட்டது. இதனால் பேச்சியம்மன் படித்துறையில் இருந்து தெப்பக்குளம் வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனாட்சி அரசு கல்லூரி வழியாக செல்லும் வைகை ஆற்றுக்கரை ரோட்டில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காலை நேரம் என்பதால் பள்ளி,கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் அதிகம் செல்லும் பாதை அது என்பதால், தற்பொழுது போக்குவரத்து அந்த பகுதிகளில் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மக்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}