ரெமல் புயல் கரையை கடக்கும் போது.. தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. மிதமான மழைக்கும் வாய்ப்பு!

May 25, 2024,04:33 PM IST

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாளை புயல் கரையை கடக்கும்போது தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும். அதே நேரத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற கூடும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெமல் புயல் நாளை நள்ளிரவில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்குவங்க கடற்கரையில் சாகர் தீவு கோபுபாரா இடையே தீவிரப் புயலாகவே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.




இந்த நிலையில் ரெமல் புயல் கரையை கடக்கும் போது தமிழ்நாட்டில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்க  தொடங்கும். அதே சமயம் தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல்  ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறதாம்.

இதனால் தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், வடக்கு வங்கக்கடல், அந்தமான் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்  எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்