சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாளை புயல் கரையை கடக்கும்போது தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும். அதே நேரத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற கூடும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெமல் புயல் நாளை நள்ளிரவில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்குவங்க கடற்கரையில் சாகர் தீவு கோபுபாரா இடையே தீவிரப் புயலாகவே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
இந்த நிலையில் ரெமல் புயல் கரையை கடக்கும் போது தமிழ்நாட்டில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கும். அதே சமயம் தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறதாம்.
இதனால் தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், வடக்கு வங்கக்கடல், அந்தமான் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}