சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாளை புயல் கரையை கடக்கும்போது தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும். அதே நேரத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற கூடும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெமல் புயல் நாளை நள்ளிரவில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்குவங்க கடற்கரையில் சாகர் தீவு கோபுபாரா இடையே தீவிரப் புயலாகவே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இந்த நிலையில் ரெமல் புயல் கரையை கடக்கும் போது தமிழ்நாட்டில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கும். அதே சமயம் தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறதாம்.
இதனால் தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், வடக்கு வங்கக்கடல், அந்தமான் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!
பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!
நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!
சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}