டெல்லி: டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தேறியது. கர்தவ்யா பாதையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து கண்கவர் அணிவகுப்பு நடந்தது.
நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். கர்தவ்யா பாதையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாந்தா கலந்து கொண்டார்.
காலை பத்தரை மணிக்கு கர்தவ்யா பாதையில் அணிவகுப்பு தொடங்கியது. இதில் கிட்டத்தட்ட 10,000 பேர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 31 அலங்கார ரதங்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன. இந்த வருடம் ஸ்வர்னிம் பாரத் - விராசத் ஆர் விகாஸ் என்ற கருப்பொருளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் முப்படையினரின் கூட்டு அலங்கார ரதம் அணிவகுப்பில் கலந்து கொண்டது. இதற்கு முன்பு வரை தனித் தனியாகவே அலங்கார வாகனங்கள் வரும். இந்த முறை கூட்டுப் படையினரின் அலங்கார வாகனம் பங்கேற்றது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட கலைஞர்களும் இந்த முறை பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் வருகை தந்தார். அவருக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர் இந்தோனேசிய அதிபர் சுபியாந்தோவுடன் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின.
இன்றைய அணிவகுப்பில் முக்கிய அம்சமாக இந்தோனேசிய நாட்டு ராணுவத்தினரும் பங்கேற்றனர். 152 பேர் கொண்ட இந்தோனேசிய ராணுவப் படையினர் அணிவகுத்து வருகை தந்தனர். அதேபோல இந்தோனேசிய ராணுவத்தின் 190 பேர் கொண்ட இசைக் குழுவும் கலந்து கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}